மணிப்பூரில் 20 ராணுவத்தினர் படுகொலை- 4 தீவிரவாத இயக்கங்களின் கூட்டமைப்பு பொறுப்பேற்பு!
இம்பால்: மணிப்பூரில் 20 ராணுவத்தினரை படுகொலை செய்த தாக்குதல் சம்பவத்துக்கு 4 தீவிரவாத இயக்கங்களின் கூட்டமைப்பு பொறுப்பேற்றுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக இத்தகைய பயங்கர தாக்குதல் வடகிழக்கு மாநிலத்தில் நடத்தப்பட்டிருப்பது உளவுத்துறையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் தனிநாடு கோரி இயங்கி பல அமைப்புகள் ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றன. இவற்றில் பெரும்பாலான அமைப்புகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி அமைதி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. இத்தகைய பேச்சுவார்த்தைகளை ஏற்காத அமைப்புகள் தொடர்ந்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இப்படி ஆயுதம் தாங்கிய குழுக்கள் அண்மையில் ஒருங்கிணைந்து ஒரு கூட்டமைப்பாக உருவாகின. இந்த அமைப்பில் நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (கப்லாங்), உல்ஃபா(ஐ) கம்தாபூர் விடுதலை முன்னணி, போடோலாந்து விடுதலை முன்னணி( சோன்ஜ்பிஜித்) ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டமைப்பான 'மேற்கு-தென்கிழக்கு ஆசியா ஐக்கிய விடுதலை முன்னணி" என்ற பெயரில் இணைந்து செயல்பட தீர்மானித்தது.
இக்கூட்டமைப்பின் முதலாவது தாக்குதல்தான் மணிப்பூரில் நேற்று ராணுவத்தினர் மீது நடத்தப்பட்டது. ராணுவத்தினர் மீதான தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாகவும் கூட்டமைப்பு அறிவித்தும் உள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் செயல்படும் பல ஆயுதம் தாங்கிய குழுக்களுக்கு இந்தியா- மியான்மர் எல்லைதான் அடக்கம். ஆள் நடமாட்டமே இல்லாத மலை வனப்பகுதிகள்தான் இவர்களுக்கு புகலிடமாக இருக்கிறது.
அதே நேரத்தில் மியான்மரில் காலூன்றி இருக்கும் லஷ்கர் இ தொய்பாவினரும் இந்த கூட்டமைப்பினருடன் கை கோர்த்திருக்கலாம் என உளவுத்துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும் மியான்மரின் காசின் விடுதலை ராணுவத்தினரே உல்ஃபா அமைப்பினருக்கு ஆயுத பயிற்சி கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.
மியான்மரை தளமாகக் கொண்டு இப்புதிய கூட்டமைப்பு மத்திய அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தியிருப்பது ராணுவம் மற்றும் உளவுத்துறைக்கு புதிய பெரும் சவாலாக உருவெடுத்திருக்கிறது.,
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications