காஷ்மீரில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம்.. புதிய சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு
காஷ்மீரில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் என்ற சட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது
ஸ்ரீநகர்: வெளி மாநிலத்தவர் ஜம்மு காஷ்மீரில் நிலம் உள்ளிட்டவற்றை வாங்கலாம் என்ற சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதுகுறித்து தேசிய மாநாட்டுக் கட்சித் தேசிய துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா சொல்லும்போது, "ஜம்மு காஷ்மீரை "விற்பனைக்கு" விட்டுள்ளது மத்திய அரசு. இதை வன்மையாக கண்டிக்கிறோம். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி சட்டத்தையும் கடுமையாக எதிர்க்கிறோம். மக்களின் விருப்பத்திற்கு உருவாக்கப்பட்ட சட்டம் இவை" என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு நேற்று ஒரு புதிய சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.. இந்த சட்டம் மூலம், இந்தியக் குடியுரிமை உடையவர்கள் லடாக், ஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்க முடியும், ஆனால் விவசாய நிலங்களை மட்டும் வாங்க இயலாது. அதாவது குறைந்த அளவு நிலங்களை வைத்துள்ள நில உரிமையாளர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள்

மத்திய அரசின் இந்த அறிவிப்பு குறித்து பேசிய ஜம்மு - காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவும், "இந்த சட்டம் மூலம் விவசாய நிலங்கள் மற்ற பயன்பாடுகளுக்கு மாற்ற முடியாது... அதேநேரம், கல்வி நிலையங்கள், சுகாதார அமைப்புகளை விவசாய நிலங்களில் ஏற்படுத்த தடை இல்லை. அதற்காக விதிகள் திருத்தப்பட்டுள்ளன" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலச் சீர்திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளதுடன், இதை அனைத்து வகையிலும் எதிர்த்துப் போராட போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.. இதுகுறித்து தேசிய மாநாட்டுக் கட்சித் தேசிய துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா கூறுகையில், ஜம்மு காஷ்மீரை "விற்பனைக்கு" விட்டுள்ளது மத்திய அரசு. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் அரசுகள் பிறப்பித்துள்ள புதிய சட்ட அறிவிப்புகள் கடும் கண்டனத்துக்குரியது. அதை தீவிரமாக எதிர்க்கிறோம். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி சட்டத்தையும் கடுமையாக எதிர்க்கிறோம். மக்களின் விருப்பத்திற்கு உருவாக்கப்பட்ட சட்டம் இவை என்றார் அவர்.
இந்த போராட்ட அறிவிப்புக்கு ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சி தலைவர் சையத் முகம்மது அல்டாப் புகாரியும் ஆதரவு தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநிலஅந்தஸ்து தர வேண்டும் என்றும் அல்டாப் புகாரி கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக நாடு முழுவதும் ஆதரவு திரட்ட போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications