For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹரித்வார் ரயில் நிலையம் அருகே கேட்பாரற்று கிடந்த பையால் பெரும் பரபரப்பு

By Siva
Google Oneindia Tamil News

ஹரித்வார்: ஹரித்வார் ரயில் நிலையம் அருகே இன்று கேட்பாரற்று கிடந்த பையால் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் ஹரித்வார் ரயில் நிலையம் அருகே இன்று கேட்பாரற்று பை ஒன்று கிடந்தது.

Railway Station

இதை பார்த்த கடைக்காரர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுடன் ரயில் நிலையத்திற்கு வந்தனர். ரயில் நிலையத்திற்கு வெளியே கிடந்த பையை வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர்.

சோதனையில் அந்த பையில் ஒரு பாட்டில் கங்கை நீரும், ஆடைகளும் இருந்தது தெரிய வந்தது. அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை.

4 வாலிபர்கள் கைதாகியுள்ள நிலையில் மாநிலத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று ஹிரத்வார் உயர் போலீஸ் அதிகாரி செந்தில் அபுதாய் கிருஷ்ண ராஜ் தெரிவித்துள்ளார்.

English summary
Security personnel went into a tizzy today after an unclaimed bag was detected near Haridwar railway station, two days after four youths with suspected terror links were arrested in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X