பெற்றோருடன் பகை- ராஞ்சியில் 4 வயது சிறுவனை துள்ளத்துடிக்க கொன்ற கொடூர தாய்மாமன்!
ராஞ்சி: ராஞ்சியில் பெற்றோர் மீது இருந்த பகையால் 4 வயது சிறுவனின் கழுத்தை அறுத்துக் கொன்ற தாய்மாமனை போலீசார் தேடி வருகின்றனர்.
ஜார்கண்ட் மாநிலம், கிழக்கு சிங்பம் மாவட்டத்தில் உள்ள பெடாடிப்பா பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுவன் அனிகெட் சர்தார். இந்நிலையில் வீட்டின் அருகாமையில் உள்ள ஒரு கடையில் சாக்லேட் வாங்கிவர சென்ற சிறுவன் வெகுநேரமாக வீடு திரும்பாததால் பெற்றோர் அவனை தேடினர்.

பலத்த தேடுதலில் அனிகெட்டின் தாயுடைய சகோதரரான கோவிந்த் என்பவர் வீட்டில் ரத்தவெள்ளத்தில் அவன் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அனிகெட்டின் பெற்றோர் மீதிருந்த பகையால் ஆட்டோ டிரைவரான கோவிந்த், சிறுவன் என்றும் பாராமல் அவனது கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு தப்பியோடிவிட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
சிறுவனின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பிவைத்த போலீசார், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் ஆட்டோ டிரைவர் கோவிந்தை தேடிவருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது.












Click it and Unblock the Notifications