வேலைக்கார பெண் சாவு தொடர்பான வழக்கில் கைதான பகுஜன் எம்.பி மீது பலாத்கார வழக்கு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: வேலைக்கார பெண் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. தனஞ்செய் சிங் மீது தற்போது பலாத்கார வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் வேலைக்கார பெண்ணை அடித்து சித்திரவதை செய்து கொலை செய்ததாக பகுஜன் எம்.பி. தனஞ்செய் சிங், அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தனஞ்செய் சிங் எம்.பி. மீது பலாத்கார வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 42 வயது பெண் ஒருவர், தம்மை துப்பாக்கி முனையில் தனஞ்செய் சிங் பலாத்காரம் செய்ததாக புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து டெல்லி போலீசார் அவர் மீது பலாத்கார வழக்கையும் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications