வரலாறு காணாத வறட்சி.. கேட்டது 39,565 கோடி.. ஒதுக்கியது வெறும் 1,748 கோடிதான்.. பாஜகவின் ஓரவஞ்சனை
வரலாறு காணாத வறட்சி தமிழகம் கண்டுள்ள நிலையில் வெறும் 1,748 கோடி ரூபாய் மட்டுமே மத்தியில் ஆளும் பாஜக அரசு ஓரவஞ்சனையாக ஒதுக்கியுள்ளது.
டெல்லி: தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாக 1,748 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை விவசாய மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தை இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை முற்றிலும் கைவிட்டது. காவிரியிலும் முறையாக தண்ணீர் வழங்கவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் வறட்சியின் பிடியில் சிக்கி தவித்தது.

இந்த வறட்சியின் காரணமாக சுமார் 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை மற்றும் மாரடைப்பால் மரணம் அடைந்தார்கள். இதனிடையே விவசாயிகள் உயிரிழப்பை தடுக்க வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரியும் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினரும் பல்வேறு அமைப்பினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் 39,565 கோடி ரூபாய் வறட்சி நிவாரணமாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் வறட்சி பாதித்த பகுதிகளை நேரில் வந்து ஆய்வு செய்த மத்தியக் குழு, வறட்சி நிவாரணமாக தமிழகத்திற்கு 2,096.80 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இதனையடுத்து, தேசிய செயற்குழுவின் துணை கமிட்டி 1,748.28 கோடி ரூபாய் மட்டுமே தர பரிந்துரை செய்துள்ளது.
இதனையடுத்து, இன்று வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங் இன்று 1,748 கோடி ரூபாய் தமிழகத்தின் வறட்சி நிவாரணமாக ஒதுக்கப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார். தமிழக அரசு கேட்ட 39,565 ரூபாய் கேட்ட நிலையில், அரை சதவீதம் கூட பணம் ஒதுக்கவில்லை என்று விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications