இந்திய விமான நிலையங்கள் ஆணையத் தலைவர் ஸ்ரீவத்சவா பதவி நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை
டெல்லி: இந்திய விமான நிலையங்கள் ஆணையத் தலைவர் ஆர்.கே.ஸ்ரீவத்சவாவை அதிரடியாக பதவி நீக்கம் செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் கீழ் 125 விமான நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் 18 சர்வதேச விமான நிலையம், 78 உள்நாட்டு விமான நிலையம் உள்ளிட்ட 26 சிவில் போக்குவரத்து விமான நிலையங்களை உள்ளன.

இந்நிலையில் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தலைவராகப் பதவி வகித்து வந்த ஸ்ரீவத்சவா திடீரென அந்த பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரை பதவி நீக்கம் செய்து மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இது குறித்து விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா கூறுகையில், விரைவில் அந்த பதவிக்கு புதியவர் நியமிக்கப்படுவார் என தெரிவித்தார். இருப்பினும் ஸ்ரீவத்சவா நீக்கத்திற்கான காரணத்தை அவர் கூறவில்லை.
இதையடுத்து புதிய தலைவராக விமான நிலையங்கள் ஆணைய இணைச் செயலாளர் அருண்குமார் நியமிக்கப்படலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஸ்ரீவத்சவா கடந்த ஆண்டு ஜனவரி 2-ம் தேதி இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்றார். அவர் பதவியேற்று 15 மாதங்களே ஆகின்றது.
5 ஆண்டுகள் பதவிக் காலம் உள்ள நிலையில் அதற்கு முன்பாக அவர் நீக்கப்பட்டுள்ளார். அவரது பதவி நீக்கத்திற்கு காரணம் என்னவென்று இதுவரை அறிவிக்கப்படவில்லை.
-
சர்ச்சைக்கு நடுவே சிபிஎஸ்இ–க்கு புதிய தலைவர் – செயலாளர் நியமனம் – மத்திய அரசு உத்தரவு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications