என் வாட்ச் ரூ.9 லட்சம், ஷூ ரூ.45,000: விவசாயிகளிடம் பெருமையடித்த மத்திய அமைச்சர் பிரேந்தர் சிங்
லக்னோ: விவசாயிகள் பேரணியில் கலந்து கொண்ட மத்திய கிராமப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சவுத்ரி பிரேந்தர் சிங் தான் ரூ.9 லட்சம் மதிப்புள்ள கைகடிகாரத்தை அணிந்திருப்பதாக பெருமையாக தெரிவித்துள்ளார்.
மத்திய கிராமப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சவுத்ரி பிரேந்தர் சிங் உத்தர பிரதேச மாநிலம் அம்ரோகாவில் நடந்த விவசாயிகள் பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் விவசாயிகளை பார்த்து நான் அணிந்திருக்கும் கைகடிகாரத்தின் மதிப்பு என்ன தெரியுமா என்று கேட்டார். பின்னர் அவரே என் கைகடிகாரத்தின் விலை ரூ. 9 லட்சம் என்றார்.
அவர் மேலும் கூறுகையில்,
நான் அணிந்திருக்கும் காலணிகளின் விலை ரூ.45 ஆயிரம் ஆகும். விலை உயர்ந்த பொருட்களை சாதாரண மக்கள் கூட தற்போது வாங்க முடியும். விலை உயர்ந்த கைகடிகாரங்களை தொழில் அதிபர்கள் மட்டும் அல்ல விவசாயிகளும் அணியலாம்.
நான் எம்.எல்.ஏ.வாகவும் சரி, எம்.பி.யாகவும் சரி யார் தயவும் இன்றி தேர்வு செய்யப்பட்டேன் என்றார்.