நிதித்துறை இணை அமைச்சராக பொன். ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு
டெல்லி: கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறையுடன் பொன். ராதாகிருஷ்ணனுக்கு கூடுதலாக நிதித்துறை இணை அமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 3ஆவது முறையாக இன்று மாற்றம் செய்யப்பட்டது. 4 இணையமைச்சர்கள் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர். 9 பேர் புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த அமைச்சரவை மாற்றத்தில் இணைஅமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் கனரக தொழில் மற்றும் பொதுத் துறை இணை அமைச்சர் பதவி பொன். ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.
பின்னர் அமைச்சரவை மாற்றத்தின் போது அவருக்கு சாலை நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல்துறை ஒதுக்கப்பட்டது. தற்போது பொன். ராதாகிருஷ்ணனுக்கு சாலை நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல்துறையுடன் நிதித்துறை இணை அமைச்சர் பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications