காஷ்மீரில் யார் பலியானாலும் அது தேசத்துக்கு இழப்பு!- நரேந்திர மோடி
டெல்லி: காஷ்மீரில் யார் பலியானாலும் அது தேசத்துக்கு இழப்புதான் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
காஷ்மீரில் நடைபெற்று வரும் வன்முறைகள் பற்றியும், அங்கு அமைதி திரும்பவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும் பிரதமர் மோடி, ஞாயிற்றுக்கிழமை அகில இந்திய வானொலியில் தனது மாதாந்திர 'மனதின் குரல்' (மன் கீ பாத்) நிகழ்ச்சியில் பேசினார்.
அவர் பேசியது:
காஷ்மீரில் உள்ள அனைத்துத் தரப்பினருடனும் நான் நடத்திய கலந்துரையாடல்களில் இருந்து ஒரு விஷயம் தெரிய வந்தது. அவற்றை எளிமையான வார்த்தைகளில் கூற வேண்டுமானால் ஒற்றுமை மற்றும் அன்பு என்று குறிப்பிடலாம். இவையே காஷ்மீர் பிரச்னையைத் தீர்ப்பதற்கான தாரக மந்திரங்கள்.

காஷ்மீரில் வன்முறை ஓயவேண்டும், அங்கு அமைதி திரும்ப வேண்டும் என்று அங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே குரலில் பேசியுள்ளன. இதன் மூலம் உலகத்துக்கும், பிரிவினைவாத சக்திகளுக்கும் தங்களது உணர்வுகளை ஒற்றுமையுடன் வெளிப்படுத்தியுள்ளனர். இந்த ஒற்றுமையை நாடாளுமன்றத்தில் ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றுவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டதற்கு சமமாகக் கருதலாம். ஒற்றுமையாகச் செயல்பட்டால் மிகப் பெரிய பிரச்னைக்குக்கூட எளிதில் தீர்வு கண்டுவிடலாம்.
இந்த நாடு மிகப்பெரியது. பல்வேறு தரப்பட்ட மக்கள் இங்கு வசிக்கின்றனர். நாடு பிளவுபடாமல் ஒன்றுபட்டு இருக்க வேண்டுமானால் ஒற்றுமையாக இருக்க வேண்டியது நமது பொறுப்பாகும். தனிப்பட்ட குடிமகன் என்ற முறையிலும், சமூகம், அரசு என்ற முறையிலும் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டியது நமது கடமையாகும். நமது நாட்டுக்கு ஒளிமயமான எதிர்காலம் உள்ளது. சாதனை புரிய வேண்டுமானால் 125 கோடி மக்களும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். நமது தேசம் ஒன்றுபட்டு இருக்கும், நமது மக்கள் ஒற்றுமையுடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக உள்ளது," என்றார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications