உ.பி. சட்டசபை தேர்தல்: முதல்வர் வேட்பாளர் பிரியங்கா காந்தியா? மவுனம் காக்கும் காங்.
டெல்லி: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி முன்னிறுத்துவதப்படுவாரா என்ற யூகங்களுக்கு பதிலளிக்காமல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது.
உத்தரப்பிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வியூகங்களில் அரசியல் கட்சிகள் மும்முரமாக களமிறங்கியுள்ளன. பாஜகவின் தேசிய செயற்குழு உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத்தில் 2 நாட்கள் நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சியோ அதிரடியாக உத்தரப்பிரதேச மேலிடப் பொறுப்பாளர்களை நீக்கிவிட்டு மூத்த தலைவரான குலாம்நபி ஆசாத்தை களமிறக்கியுள்ளது. இந்த அறிவிப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் குலாம்நபி ஆசாத் கூறியதாவது:
உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்திய பின்னரே யார் முதல்வர் வேட்பாளர் என்பதை அறிவிப்போம். ராகுல் காந்தியைப் பொறுத்தவரை அவர் தேசிய தலைவர். அவரை உத்தரப்பிரதேச மாநில முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த மாட்டோம்.
லோக்சபா தேர்தலுக்கு முன்னர் முசாபர்நகர் கலவரத்தை பாஜக நிகழ்த்தியது. அதே போல் தற்போதும் உத்தரப்பிரதேசத்தின் ஆங்காங்கே மத வன்முறை தூண்டிவிட்டு இந்துக்கள் வாக்குகளைத் தக்க வைத்துக் கொள்ள பாஜக முயற்சிக்கிறது. இதற்கு மத்திய அரசும் உதவி செய்து வருகிறது.
இத்தகைய போக்குகளைக் கைவிட்டு தங்களது கொள்கைகளை முன்வைத்து தேர்தலை எதிர்கொள்வதுதான் சரியானதாக இருக்கும்.
இவ்வாறு குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார்.
-
தவெகவை ஏன் எதிர்க்கிறீர்கள்? வாரிய பதவி கேட்டு வாங்குங்க! ஸ்ரீநிதிக்கு காங்கிரஸ் நிர்வாகி அட்வைஸ் -
23 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வி! தேர்தல் நிதியில் முறைகேடு? ஐவர் குழு அமைப்பு! வேட்பாளர்கள் ஷாக் -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி! -
"கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்".. திமுகவுக்கு காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் பதிலடி! -
“தேர்தல் படுதோல்விக்கு பிறகு கூட.. திமுக பாடம் கற்கவில்லை!” காங். அமைச்சர் ராஜேஷ்குமார் சாடல்! -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
காங்கிரஸ் உண்டு கொழிக்கும் ஒட்டுண்ணி! பயணிக்கும் படகிலேயே ஓட்டை போடும் அறிவாளிகள்! வெளுத்த திமுக -
“மாணிக்கம் தாகூர் சொல்வது அப்பட்டமான பொய்.. காங்கிரஸ்காரர்கள் நன்றி கெட்டவர்கள்”.. விளாசிய திமுக! -
காங்கிரஸ் இல்லாத தூத்துக்குடி மாவட்டமாக மாற்றிக் காட்டுவேன் - அனிதா ராதாகிருஷ்ணன் எடுத்த சபதம்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு












Click it and Unblock the Notifications