For Daily Alerts
Just In
உ.பி.யில் மீண்டும் பயங்கரம்: 16 வயது சிறுமி மரத்தில் பிணமாக தொங்கவிடப்பட்டார்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் 16 வயது சிறுமி ஒருவர் மரத்தில் பிணமாகத் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் 16 வயது சிறுமி மரத்தில் பிணமாகத் தொங்கியதை உள்ளூர் மக்கள் கண்டுபிடித்துள்ளனர். சிறுமியை யாரோ பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்து மரத்தில் தொங்கவிட்டுள்ளதாக அவரின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் கடந்த மாதம் 14 மற்றும் 15 வயது சகோதரிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருடன் மரத்தில் தொங்கவிடப்பட்டதால் உயிர் இழந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து அந்த மாநிலத்தில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படுவது அதிகரித்துள்ளது.
அகிலேஷ் யாதவ் ஆளும் மாநிலத்தில் காவல் நிலையத்திற்குள்ளேயே ஒரு பெண் போலீசாரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள கொடுமையும் நடந்துள்ளது.
English summary
In yet another case of UP lawlessness, a 16-year old girl was found hanging from the tree in Moradabad of Uttar Pradesh.The parents of the minor cry foul, saying that the girl was raped and then murdered, akin to the twin rape cases in Badaun.
Story first published: Thursday, June 12, 2014, 9:59 [IST]