உ.பி.யில் என்ன தான் நடக்கிறது: முதலில் பலாத்காரம், தற்போது சிறுமி மீது தீ வைப்பு
Subscribe to Oneindia Tamil
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் சொத்து தகராறில் 17 வயது சிறுமி மீது தீ வைத்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் பதாவ்ன் பகுதியில் 2 சகோதரிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு மரத்தில் பிணமாகத் தொங்கவிடப்பட்ட சம்பவத்தால் ஏற்பட்ட பரபரப்பே இன்னும் அடங்கவில்லை. அதற்குள் அங்கு மீண்டும் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள பர்வாலியா கிராமத்தில் சொத்து தகராறில் உள்ளூர் ரவுடிகள் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அவர் எதிர்க்கவே அவர் மீது மண்ணெய்யை ஊற்றி தீ வைத்தனர். இதில் படுகாயம் அடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications