எதிர்க்கட்சி கூட்டத்திற்கு சென்றால் மஞ்சள் காமாலை வரும்.. மக்களுக்கு சாபம்விட்ட உ.பி எம்எல்ஏ
தன்னுடைய கட்சியை தவிர வேறு கட்சி நடத்தும் கூட்டத்தை பார்க்க செல்லும் மக்களுக்கு எல்லாம் மஞ்சள் காமாலை வரும் என்று உத்தர பிரதேச எம்எல்ஏ ஓம் பிரகாஷ் ராஜ்பூர் சாபம் விட்டுள்ளார்.
Recommended Video

லக்னோ: தன்னுடைய கட்சியை தவிர வேறு கட்சி நடத்தும் கூட்டத்தை பார்க்க செல்லும் மக்களுக்கு எல்லாம் மஞ்சள் காமாலை வரும் என்று உத்தர பிரதேச எம்எல்ஏ ஓம் பிரகாஷ் ராஜ்பூர் சாபம் விட்டுள்ளார்.
சுகள்தேவ் பாரத் சமாஜ் கட்சி என்ற பெயரில் கட்சியை பதிவு செய்து சுயேட்சையாக உத்தர பிரதேசத்தில் எம்எல்ஏ ஆகி இருக்கும் ஓம் பிரகாஷ் தீவிர மோடி ஆதரவாளர். பல முறை மோடியை சந்திக்க விண்ணப்பம் விடுத்துள்ளார். முக்கியமாக குஜராத் மாடலை உத்தர பிரதேசத்தில் அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது இந்த எம்எல்ஏ புதிய சர்ச்சை கருத்து ஒன்றை கூறியுள்ளார். அதன்படி தன்னுடைய கட்சியை தவிர வேறு கட்சி நடத்தும் கூட்டத்தை பார்க்க செல்லும் மக்களுக்கு எல்லாம் மஞ்சள் காமாலை வரும் என்று உத்தர பிரதேச எம்எல்ஏ ஓம் பிரகாஷ் ராஜ்பூர் சாபம் விட்டுள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், நான் மாநிலம் முழுக்க இனி நிறைய கூட்டம் நடத்த போகிறேன். இந்த கூட்டத்தில் அந்த பகுதி மக்கள் எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு சாபம் விடுவேன். என் கூட்டத்தில் கலந்து கொள்ளாத, வேறு கூட்டத்திற்கு செல்லும் எல்லோருக்கும் மஞ்சள் காமாலை வரும். நான் சாபம் விட்டால் பலிக்கும்.
நீங்கள் வேறு கூட்டத்திற்கு சென்று மஞ்சள் காமாலை வந்துவிட்டால் அதை குணப்படுத்தும் மருந்து என்னிடம் உள்ளது. நீங்கள் என் கூட்டத்திற்கு வந்து, என்னிடம் மன்னிப்பு கேட்டு, என்னிடம் ஆசி வாங்கினால் உங்கள் சாபம் தீர்ந்து விடும் என்று குறிப்பிட்டுள்ளார். இவரது பேச்சு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications