எப்.ஐ.ஆர். பதிவு செய்ய பீட்சாவும், சில்லி சிக்கனும் கேட்ட பெண் போலீஸ் அதிகாரி சஸ்பென்ட்
பீட்சா லஞ்சம் கேட்ட பெண் போலீஸ் உதவி ஆய்வாளர் சஸ்பெண் வ்ப்ன் ட் செய்யப்பட்டார்.
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் புகார் அளிக்க வந்தவரிடம் பீட்சா வாங்கித் தரச்சொன்ன பெண் காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னா மாவட்டம் ஹசன்காஞ்சு எனும் ஊரைச் சேர்ந்தவர் ரோஹித் பேரி. அதே ஊரில் ஓட்டல் நடத்தி வரும் இவர், சிலர் மீது புகார் அளிப்பதற்காக கடந்த வியாழக்கிழமை மாலை காவல் நிலையத்துக்கு சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் சுமித்திரா தேவி, புகாரை பதிவு செய்ய பீட்சாவும், சில்லி சிக்கனும் லஞ்சமாக வேண்டும் என ரோஹித் பேரியிடம் கேட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ரோஹித் பேரி, இந்த சம்பவம் பற்றி சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இது வைரலானதைத் தொடர்ந்து, சம்பவம் பற்றி விசாரிக்க காவல் துறை அதிகாரிகளுக்கு, உன்னா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
இதையடுத்து, காவல்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சுமித்திரா தேவி பீட்சா கேட்டது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை பணியிடை நீக்கம் செய்து காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
புகார்தாரரிடம் பீட்சா கேட்டு பெண் எஸ்.ஐ. சஸ்பென்ட் ஆன விவகாரம் உத்தரபிரதேச மாநிலம் மட்டுமின்றி நாடு முழுவதும் வைரலாகியுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications