Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாடி கணவன்.. கேடி மனைவி! கொழுந்தனுடன் ஓடி போன அர்ஷி! ஜாகீரின் ’அந்த’ வீக்னஸ்..கலவரமான காவல் நிலையம்!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உபியில் மகளுக்கு நிச்சயித்த மணமகனுடன் மாமியார் ஓடிப்போய் திரும்பி வந்து தற்போது அவருடன் வாழ்ந்து வருவது ஊர் அறிந்த கதை. இந்த நிலையில் தற்போது அதே உபியில் கொழுந்தனுடன் ஓடிப் போய் இருக்கிறார் இளம் பெண் ஒருவர். அதற்கு கணவர் கூறிய காரணம் தான் அதிர்ச்சி ரகம். கணவர் தாடியை கிளீன் ஷேவ் செய்யாததால் சேவ் செய்திருந்த தனது கொழுந்தனுடன் மனைவி எஸ்கேப் ஆனதாக கூறி அதிர வைத்திருக்கிறார். ஆனால் காரணம் அது இல்லை.. என்ன தான் நடந்தது என பார்ப்போம்..

உத்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மகளுக்கு நிச்சயம் செய்த இளைஞருடன் மாமியார் ஓடிப் போனார். அதிர்ச்சி அடைந்த கணவர் இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தார். ஒரு மாதத்திற்கு பிறகு நேபாள எல்லையில் தங்கி இருந்த அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.

தினமும் தகராறு செய்யும் கணவன், திட்டிக்கொண்டே இருக்கும் மகள் என வாழ்க்கையை வெறுப்பாக இருந்த நிலையில், மருமகன் ஆறுதலாய் பேச நான் அவரிடம் தான் வாழ்வேன் என கூறி அதிர வைத்தார். இந்த சம்பவம் நாடு முழுக்க செய்தியாக வெளியாகி பரபரப்பையும் நகைச்சுவையையும் ஏற்படுத்தியது. இது ஒரு புறம் இருக்க தற்போது மற்றொரு விவகாரம் மீண்டும் ஒரு விவகாரம் பேசுபொருளாகி இருக்கிறது.

lucknow uttar pradesh crime

உத்தர பிரதேசத்தில் தனது கணவர் கிளீன் ஷேவ் செய்ய மறுப்பதாகவும் இதனால் அவரது தம்பியுடன் ஓடிப் போயிருக்கிறார் இளம்பெண் ஒருவர். உத்தர பிரதேசத்தின் மீரட் பகுதியைச் சேர்ந்த முகமது ஜாஹிர், அர்ஷி ஆகியோருக்கு ஏழு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றிருக்கிறது. முகமது ஜாகிர் இஸ்லாமிய முறைப்படி நீண்ட தாடி வைத்திருந்தார். ஆனால் தனக்கு அது பிடிக்கவில்லை எனவும்,சுத்தமாக ஷேவ் செய்ய வேண்டும் என அர்ஷி கணவரிடம் கூறியிருக்கிறார்.

ஆனால் அதனை அவர் ஏற்கவில்லை என கூறப்படுகிறது. அர்ஷி தொடர்ந்து வலியுறுத்த ஜாஹிரோ திட்டவட்டமாக தாடியை எடுக்க முடியாது என கூறிவிட்டாராம். இதனால் அவர்களுக்கிடையே சண்டை ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் முகமது ஜாஹிரின் தம்பியான சபீருடன் அர்ஷி பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. தன் அண்ணனைப் போல தாடி வளர்க்காத சபீர் ட்ரீம் செய்து எப்போதும் நீட்டாக இருப்பாராம். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சபீருடன் அர்ஷி மாயமானார். பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் முகமது ஜாகீர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

தாடி வளர்ப்பது அர்ஷிக்கு பிடிக்கவில்லை, என் சகோதரன் அவருடன் மாயமாகிவிட்டார். என்னை கொல்ல அவர்கள் சதித்திட்டம் போட்டு இருக்கிறார்கள். அவர்களை கண்டுபிடித்து தரவேண்டும் என போலீசில் புகார் அளித்திருக்கிறார். இதற்கிடையே தனது பெற்றோர் வீட்டுக்கு சபீருடன் அர்ஷி வந்திருக்கிறார். தொடர்ந்து இருவரும் காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில் தனது கணவரான முகம்மது ஜாஹிருடன் தனக்கு வாழ விருப்பமில்லை. அவர் பாலியல் ரீதியாக தகுதியற்றவர். தாடி எல்லாம் பிரச்சனை இல்லை. நான் சபீர் உடன் தான் வாழ விரும்புவதாக கூறினார். இதனையடுத்து காவல் நிலையத்திலேயே கண்ணீருடன் விவகாரத்தை சொல்லி விட்டு வந்திருக்கிறார் ஜாஹீர். தற்போது இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+