யூரி தாக்குதல்.. பாகிஸ்தான் தூதருக்கு சம்மன் அனுப்பியது இந்தியா !
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூரி செக்டாரில் நடந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்துக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூரி செக்டாரில் உள்ள ராணுவ நிர்வாகத் தலைமையகத்திற்குள் புகுந்து 4 தீவிரவாதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தினர். இந்திய ராணுவத்தினர் அந்த 4 தீவிரவாதிகளையும் சுட்டுக் கொன்றுவிட்டனர். இருப்பினும் இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 18 பேர் வீர மரணம் அடைந்தனர்.

இதையடுத்து இந்தியாவிற்குள் ஊடுறுவ முயன்ற 15 தீவிரவாதிகளில் 10 பேரை இந்திய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர். மீதமுள்ள 5 பேரை ராணுவத்தினர் தேடி வருகின்றனர்.
இதனிடையே இந்த தாக்குதலுக்கு காரணமான லக்ஸர்-ஈ-தொய்பா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் முப்படை ராணுவ தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து மோடி விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்துக்கு இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்ஷங்கர் சம்மன் அனுப்பியுள்ளார். அதில் யூரி தாக்குதல் சம்பவம் குறித்து மத்திய அரசின் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஷ் ஸ்வரூப், உரிய விளக்கம் அளிக்கும்படி பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்தை அறிவுறுத்தியுள்ளதாகக் கூறினார்.
-
ஈரான் போரால் பாகிஸ்தானுக்கு பேரிடி.. இப்படி நடக்கும்னு எதிர்பார்த்து இருக்கவே மாட்டாங்கே.. போச்சே -
எவ்வளவு அடி வாங்கியும் திருந்தல.. வாயை விடும் பாக். அமைச்சர்! இந்தியாவின் ஒரு தாக்குதலுக்கு தாங்காது -
பயங்கரமாக சொதப்பிய பாகிஸ்தான்! ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி! மோசமடையும் நிலைமை -
இந்தியாவுக்கு வர வேண்டிய ஈரான் எண்ணெய் கப்பல்.. சீனாவுக்கு திடீர் யூ-டர்ன்.. நடந்தது என்ன? -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்!












Click it and Unblock the Notifications