அமெரிக்க அரசு முடங்கியதால், இஸ்ரோவின் செவ்வாய் கிரக பயணத் திட்டம் பாதிப்பு?
பெங்களூர்: அமெரிக்க அரசு முடங்கிப் போயுள்ளதால், ரூ 450 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக் கோள் அனுப்பும் இஸ்ரோவின் திட்டம் பாதிகப்பட்டும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இப்போது திட்டமிட்டுள்ள தேதியை விட்டால், அடுத்து இரண்டு ஆண்டுகள் கழித்துதான் இந்த செயற்கைக் கோளை ஏவ முடியும் என்பதால் பிரச்சினை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அமெரிக்காவில் எதிர்க்கட்சிகளின் பிடிவாதம் காரணமாக பட்ஜெட்டுக்கு நிதி ஒதுக்கீடு தடைப்பட்டுள்ளதால், ஒட்டுமொத்தமாக அரசே முடங்கிப் போயுள்ளது.
இதனால் இந்திய அரசின் லட்சிய விண்வெளித்திட்டமான செவ்வாய்க் கிரகத்திற்கு செலுத்த இருக்கும் விண்கலத் திட்டத்தையும் பாதிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
ரூ. 450 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள செவ்வாய் ஆர்பிட்டர் மிஷன் வரும் 28 ஆம் தேதி மாலை 4.15 மணி அளவில் தங்களது ராக்கெட்டை ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்துவதாகத் திட்டமிட்டுள்ளது. இதற்கான விண்கலம் பெங்களூருவில் தயாரிக்கப்பட்டு மிகுந்த பாதுகாப்புடன் கடந்த 3 ஆம் தேதி சென்னை வந்து சேர்ந்தது.
இதனை விண்ணில் செலுத்துவதற்கு அமெரிக்க விண்வெளி மையமான நாசாவின் தொடர்பு ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டும் ஆதரவுகள் தேவை. அமெரிக்காவில் தற்போது ஏற்பட்டுள்ள் பணிநிறுத்தம் இத்தகைய விண்கல கண்காணிப்பு நிலையங்களையும் பாதித்துள்ளது. நாசாவும் தன்னுடைய ஊழியர்கள் 18,000 பேரில் 97 சதவிகிதத்தினரை ஊதியம் இல்லாத பணி விடுப்பில் அனுப்பியுள்ளது.
இதனால் இவர்களின் பல விண்வெளி நிலையங்கள் ஊழியர்கள் இல்லாமல் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இஸ்ரோ இந்த கண்காணிப்பு நிலையங்களை நம்பி செயல்படுவது கேள்விக்குரியதாக உள்ளது.
இந்திய விண்கலத்தின் சுற்றுப்பாதை குறித்த உறுதியான, துல்லியமான வழிகாட்டுதல்களை அளிக்க நாசா ஏற்கனவே ஒப்புக் கொண்டிருந்தது. ஆனால், அமெரிக்க அரசின் நிதி நெருக்கடி காரணமாக நாசா கிட்டத்தட்ட மூடப்பட்டுள்ளது.
இதனால் இந்த நேரத்தில் இஸ்ரோவின் கோரிக்கைக்கு பதிலளிக்க இயலவில்லை என்று நாசாவின் தகவல் தொடர்பு அதிகாரி தனது பத்திரிகை செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இதற்கான செலவு 70 கோடி!
இந்திய செவ்வாய்க் கிரக திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த தேசிய நிபுணர்கள் குழுவின் தலைவர் பேராசிரியர் யு.ஆர்.ராவ் விண்கலத்தை செலுத்த முடிவு செய்யப்பட்ட தேதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில் அதன் பின்னர் வரும் 2015 ஆம் ஆண்டின் இறுதி வரையிலோ அல்லது 2016 ஆம் ஆண்டின் தொடக்கம் வரையிலோ பூமி மற்றும் செவ்வாய்க் கிரக கோள்களின் நிலைமை இதற்குச் சாதகமாக இருக்காது என்று தெரவித்துள்ளார்.
திட்டமிட்டபடி செவ்வாய் நோக்கி இந்திய செயற்கைக் கோள் பறப்பது இப்போது நாசாவின் கையில் உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications