வழக்கை வாபஸ் பெறாவிட்டால் காலவரையற்ற உண்ணாவிரதம்...: தேவ்யானி அப்பா
மும்பை: விசா மோசடி என தன் மகள் மீது சித்தரிக்கப்பட்ட வழக்கை திரும்ப பெறாவிட்டால் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இந்திய பெண் துணைத் தூதர் தேவ்யானியின் தந்தை தெரிவித்துள்ளார்.
நியூயார்க் நகரில் இந்திய தூதரகத்தில் துணை தூதராக பணியாற்றி வந்த தேவயானி கோப்ரகடே அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசா மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுளின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு நடத்தப்பட்ட விதம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் கைது விவகாரத்தில் ஆரம்பம் முதல் தனது கண்டனத்தைத் தேரிவித்து வரும் இந்திய அரசு, அவர் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என அமெரிக்காவை வற்புறுத்தி உள்ளது.

இந்நிலையில் தேவயானியின் தந்தையும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான உத்தம் கோப்ரகடே நேற்று, மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எனது மகள் கைது செய்யப்பட்டதில் திட்டமிடப்பட்ட சதி திட்டம் அரங்கேற்றப்பட்டு உள்ளது. அவர் எந்த ஒரு மோசடியும் செய்யவில்லை. காணாமல் போன அவரது பணிப்பெண் சங்கீதாவுக்கு சம்பளம் கொடுக்கும் விஷயத்தில் தவறான தகவல் எதையும் கொடுக்கவில்லை.
இந்த பிரச்சினையில் மோசடி எதுவும் நடந்து இருந்தால், அதை பணிப்பெண் சங்கீதா தான் செய்து இருப்பார். விசா பெற சங்கீதா தான் விண்ணப்பம் செய்தார். அவர் விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு உள்ளார். அமெரிக்கா அதிகாரிகளால் அவர் இருதடவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார். இதில் பயன் பெற்றது யார்?. சங்கீதா தான் விசா பெற்று உள்ளார். எனவே இதில் மோசடி நடந்து இருந்தால், அதை சங்கீதா தான் செய்து இருக்க வேண்டும்.
எனது மகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சித்தரிக்கப்பட்டு எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. போலி ஆவணங்களால் எப்.ஐ.ஆர். உருவாக்கப்பட்டு உள்ளது. எனது மகள் மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும். அவரது கவுரவம் மீட்டெடுக்கப்பட வேண்டும். நான் சோனியா காந்தியையும், பிரதமரையும் சந்திக்க முயற்சி செய்து வருகிறேன். எனது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர் மீதான வழக்குகளை அமெரிக்க அரசு திரும்ப பெறாவிட்டால் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவேன்.
இந்த பிரச்சினையில் அமெரிக்க அரசு வக்கீல் பிரித் பராரா தெரிவித்து உள்ள விளக்க அறிக்கை கண்டனத்துக்குரியது. அவரது அறிக்கை இந்திய அரசையும், இந்திய நீதித்துறையையும் சேதப்படுத்தி உள்ளது. இந்திய கோர்ட்டுகள் சங்கீதாவுக்கு நீதி வழங்கவில்லை, அவரை அமைதிப்படுத்த முயற்சி நடந்து உள்ளது என்று பிரித் பராரா குற்றம் சாட்டி உள்ளார். இது கோர்ட்டு அவமதிப்பு ஆகும். அவர் மீது சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
3ம் உலகப்போர் வாசலில் நிற்கும் உலகம்? ஈரானை வீழ்த்த அணு குண்டை கையில் எடுக்கும் இஸ்ரேல், அமெரிக்கா? -
ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு! -
Hormuz: ஹார்முஸ் ஜலசந்தி திறக்குமா? திறக்காதா? 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் அளித்த ரிப்ளை -
எல்லா பிரச்சினைக்கும் டிரம்ப் தான் காரணம்.. சரியா திட்டமிடல.. சிஐஏவின் ex தலைவர் காட்டம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications