கொஞ்சமாவது அறிவோடு பேசுங்கள்.. பிரதமர் மோடி அதிரடி தாக்கு
ரபேல் பேரம் குறித்து பிரதமர் மோடி அதிரடியாக தாக்கி பேசியுள்ளார்.
அகமதாபாத்: ரபேல் போர் விமானங்கள் குறித்து நான் சொன்ன கருத்தை திரித்துப் பேசாமல் உள்ளது உள்ளபடியே பார்க்க எதிர்க்கட்சிகள் கற்றுக் கொள்ள வேண்டும். கொஞ்சமாவது பொது அறிவை பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம் ஜாம் நகரில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு இன்று பேசினார். அப்போது எதிர்க்கட்சிகளை உண்டு இல்லை என்று விமர்சித்தார்.

பிரதமர் பேசுகையில், ரபேல் விமானங்கள் நம்மிடம் இருந்திருந்தால் நமது போர் விமானம் எதுவும் எதிரிகளால் தாக்கப்பட்டிருக்காது, நமது வீரர்களும் உயிரிழந்திருக்க மாட்டார்கள். எதிரிகள் தரப்பிலும் யாரும் உயிர் தப்பியிருக்க மாட்டார்கள் என்றுதான் நான் கூறியிருந்தேன். இதை கொஞ்சமாவது பொது அறிவோடு புரிந்து கொள்ள எதிர்க்கட்சிகள் முன்வர வேண்டும்.
ரபேல் போர் விமானங்களை நாம் இன்னேரம் வாங்கியிருந்தால், உரிய நேரத்தில் அவை கொள்முதல் செய்யப்பட்டிருந்தால், இந்த தாக்குதல் வேறு மாதிரியாக இருந்திருக்கும். இதுதான் நான் கூறியது. ஆனால் நமது விமானப்படையின் தரத்தை நான் சந்தேகப்படுவதாக எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றன.
நாட்டிலிருந்து தீவிரவாதம் அகற்றப்பட வேண்டும் என்று தேசமே விரும்புகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியைப் பார்த்து நான் கேட்கிறேன்.. நீங்கள் நமது படையை நம்பவில்லையா. நமது ராணுவத்தினரை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும் என்றார் பிரதமர் மோடி.
-
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications