2.89 கோடி வாக்காளர்கள் மொத்தமாக நீக்கம்! SIR பணிகளுக்கு பின் தலைகீழாக மாறிய உபி வாக்காளர் பட்டியல்
லக்னோ: SIR பணிகளுக்குப் பிறகு உத்தர பிரதேசத்தில் இப்போது வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அங்கு மொத்த வாக்காளர்களில் 18.70% பேர், அதாவது 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் உத்தரப் பிரதேச வாக்காளர்கள் எண்ணிக்கை 12.55 கோடியாகக் குறைகிறது.
பீகாரில் கடந்த மாதம் தேர்தல் நடந்த நிலையில், அதற்கு முன்பு அங்கு எஸ்ஐஆர் பணிகள் நடத்தப்பட்டன. அதேபோல மற்ற தேர்தல் நடக்கும் மாநிலங்களிலும் எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்ளத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டது. அதன்படி தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, உத்தர பிரதேசம் மாநிலங்களில் SIR எனப்படும் சிறப்பு வாக்காளர் திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஏற்கனவே, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் SIR பணிகளுக்குப் பிறகு, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், இப்போது உத்தரப் பிரதேச மாநிலத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் மொத்தம் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதாவது மொத்த வாக்காளர் பட்டியலில் 18.70% பேர் நீக்கப்பட்டுள்ளனர். அதில் குறிப்பாக 46 லட்சம் பேர் உயிரிழந்துவிட்டதாகச் சொல்லி நீக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் 15.44 கோடியாக இருந்த உத்தரப் பிரதேச வாக்காளர்களின் எண்ணிக்கை, 12.55 கோடியாகக் குறைகிறது.
தேர்தல் ஆணையத்தின் தகவல்படி, உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவில் அதிகபட்ச வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எஸ்ஐஆர் பணிகளுக்கு முன்பு லக்னோவில் 39.9 லட்சம் வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது அது 27.9 லட்சமாகக் குறைந்துள்ளது. அதாவது 30 சதவிகித வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதேபோல், லலித்பூரில் வாக்காளர் எண்ணிக்கை 9.5 லட்சத்தில் இருந்து 8.6 லட்சமாகக் குறைந்து. அதாவது 10 சதவிகித சரிவைக் கண்டது.
மொத்தம் 2.89 கோடி பேரின் பெயர்கள் நீக்கப்பட்டதில், 2.17 கோடி பேர் வேறு இடங்களுக்கு மாறியவர்கள் ஆகும். 46.23 லட்சம் பேர் உயிரிழந்தவர்கள் என்றும் 25.47 லட்சம் பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்ததாக நீக்கப்பட்டுள்ளது.
இப்போது வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது. இதில் எதாவது பிழைகள் இருப்பதாகக் கருதினால் பொதுமக்கள் முறையீடு செய்யலாம். அவை குறித்து விசாரித்த தேர்தல் ஆணையம் தேவையான நடவடிக்கையை எடுக்கும். இறுதி வாக்காளர் பட்டியல் மார்ச் 6 அன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது..
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications