Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருமணமான உறவுக்கார பெண் மீது காதல்.. பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு கடவுள் மீது பழிபோட்ட உசேன் செய்க்!

Subscribe to Oneindia Tamil

காந்தி நகர்: உத்தர பிரதேசத்தை சேர்ந்த 46 வயது நிரம்பிய நபர் தனது உறவுக்காரரின் மனைவியை காதலிப்பதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அந்த பெண் அளித்த புகாரில் போலீசார் கைது செய்தனர். தற்போது ஜாமீனில் வெளியே வந்த அவர் மீண்டும் அந்த பெண்ணுக்கு தொல்லை கொடுத்து கைதான நிலையில் அல்லா சொல்லி தான் இப்படி செய்ததாக கூறி பழி போட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் எக்ராஜ் உசேன் செய்க். இவருக்கு வயது 46. இவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஜமால்பூரில் கடந்த 3 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவரது வீட்டு அருகே உறவினர் ஒருவர் வசித்து வருகிறார். அவர் திருமணம் ஆனவர்.

uttar-pradesh-46-year-old-man-harasses-sister-in-law-and-he-says-allah-told-me-to-drag-her

இந்நிலையில் தான் எக்ராஜ் உசேன் செய்க்கிற்கு தனது உறவுக்காரரின் மனைவி மீது காதல் ஏற்பட்டுள்ளது. இந்த காதலை எக்ராஜ் உசேன் செய்க் அந்த பெண்ணிடம் வெளிப்படுத்தி உள்ளார்.

அதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெண் காதலை ஏற்க மறுத்துள்ளார். மேலும், உசேன் செய்க்கை கண்டித்துள்ளார். ஆனாலும் அவர் விடவில்லை. அந்த பெண்ணுக்கு பின்னால் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, தனது உறவுக்காரரிடம், ‛‛உங்களின் மனைவியை காதலிக்கிறேன். அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். அவரை என்னுடன் அனுப்பி வைக்க வேண்டும். மாறாக என் காதலுக்கு யாராவது குறுக்கே நின்றால் அவர்களை கொன்றுவிடுவேன்'' என்று மிரட்டினார்.

இதனால் பாதிக்கப்பட்ட பெண் 2024ம் ஆண்டில் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து உசேன் செய்க்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தான் சமீபத்தில் உசேன் செய்க் ஜாமீனில் வெளியே வந்தார். தனது நடத்தையை மாற்றி கொண்டு வாழ்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உசேன் செய்க் அப்படி எதையும் மாற்றி கொள்ளவில்லை.

ஜாமீனில் வெளியே வந்த உசேன் செய்க் மீண்டும் தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் ஆசைப்பட்ட பெண்ணின் மாமியார் இருந்தார். இவரை பார்த்தவுடன் இடத்தை காலி செய்யும்படி அவர் விரட்டினார். ஆனால் உசேன் செய்க் போக மறுத்துவிட்டார். அதுமட்டுமின்றி வீட்டுக்குள் இருந்த உறவினரின் மனைவியை பார்த்து தன்னுடன் வரும்படி கூறினார். அதோடு அவரது கையை பிடித்து இழுத்ததோடு, தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும். போலீசில் கொடுத்த புகாரை வாபஸ் பெற வேண்டும் என்று கூறினார்.

இதனை பார்த்த அந்த பெண்ணின் மாமியார் உசேன் செய்க்கை திட்டி அங்கிருந்து அனுப்பி வைத்தார். அப்போது அவரிடம், உனது மகன் மற்றும் உனது கணவரை கொன்று விடுவேன் என்று மிரட்டினார். இதனால் மீண்டும் அந்த பெண் போலீசில் புகாரளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து உசேன் செய்க்கை கைது செய்துள்ளனர்.

கைதான உசேன் செய்க்கிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், ‛‛என்னிடம் ஒருவர் பேசினார். எங்கே உலா வருகிறாய்? இந்த விஷயத்தின் மேட்டர் உனது கையில் தான் உள்ளது. உடனே போய் அந்த பெண்ணை இழுத்து கொண்டு வா என்று கூறினார். அது அல்லாவின் வாய்ஸாகும்'' என்று கூறினார். மேலும் போலீஸ் விசாரணையில் பலமுறை அல்லா சொல்லி தான் இப்படி செய்ததாக அவர் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+