திருமணமான உறவுக்கார பெண் மீது காதல்.. பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு கடவுள் மீது பழிபோட்ட உசேன் செய்க்!
காந்தி நகர்: உத்தர பிரதேசத்தை சேர்ந்த 46 வயது நிரம்பிய நபர் தனது உறவுக்காரரின் மனைவியை காதலிப்பதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அந்த பெண் அளித்த புகாரில் போலீசார் கைது செய்தனர். தற்போது ஜாமீனில் வெளியே வந்த அவர் மீண்டும் அந்த பெண்ணுக்கு தொல்லை கொடுத்து கைதான நிலையில் அல்லா சொல்லி தான் இப்படி செய்ததாக கூறி பழி போட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.
உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் எக்ராஜ் உசேன் செய்க். இவருக்கு வயது 46. இவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஜமால்பூரில் கடந்த 3 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவரது வீட்டு அருகே உறவினர் ஒருவர் வசித்து வருகிறார். அவர் திருமணம் ஆனவர்.

இந்நிலையில் தான் எக்ராஜ் உசேன் செய்க்கிற்கு தனது உறவுக்காரரின் மனைவி மீது காதல் ஏற்பட்டுள்ளது. இந்த காதலை எக்ராஜ் உசேன் செய்க் அந்த பெண்ணிடம் வெளிப்படுத்தி உள்ளார்.
அதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெண் காதலை ஏற்க மறுத்துள்ளார். மேலும், உசேன் செய்க்கை கண்டித்துள்ளார். ஆனாலும் அவர் விடவில்லை. அந்த பெண்ணுக்கு பின்னால் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, தனது உறவுக்காரரிடம், ‛‛உங்களின் மனைவியை காதலிக்கிறேன். அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். அவரை என்னுடன் அனுப்பி வைக்க வேண்டும். மாறாக என் காதலுக்கு யாராவது குறுக்கே நின்றால் அவர்களை கொன்றுவிடுவேன்'' என்று மிரட்டினார்.
இதனால் பாதிக்கப்பட்ட பெண் 2024ம் ஆண்டில் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து உசேன் செய்க்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தான் சமீபத்தில் உசேன் செய்க் ஜாமீனில் வெளியே வந்தார். தனது நடத்தையை மாற்றி கொண்டு வாழ்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உசேன் செய்க் அப்படி எதையும் மாற்றி கொள்ளவில்லை.
ஜாமீனில் வெளியே வந்த உசேன் செய்க் மீண்டும் தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் ஆசைப்பட்ட பெண்ணின் மாமியார் இருந்தார். இவரை பார்த்தவுடன் இடத்தை காலி செய்யும்படி அவர் விரட்டினார். ஆனால் உசேன் செய்க் போக மறுத்துவிட்டார். அதுமட்டுமின்றி வீட்டுக்குள் இருந்த உறவினரின் மனைவியை பார்த்து தன்னுடன் வரும்படி கூறினார். அதோடு அவரது கையை பிடித்து இழுத்ததோடு, தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும். போலீசில் கொடுத்த புகாரை வாபஸ் பெற வேண்டும் என்று கூறினார்.
இதனை பார்த்த அந்த பெண்ணின் மாமியார் உசேன் செய்க்கை திட்டி அங்கிருந்து அனுப்பி வைத்தார். அப்போது அவரிடம், உனது மகன் மற்றும் உனது கணவரை கொன்று விடுவேன் என்று மிரட்டினார். இதனால் மீண்டும் அந்த பெண் போலீசில் புகாரளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து உசேன் செய்க்கை கைது செய்துள்ளனர்.
கைதான உசேன் செய்க்கிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், ‛‛என்னிடம் ஒருவர் பேசினார். எங்கே உலா வருகிறாய்? இந்த விஷயத்தின் மேட்டர் உனது கையில் தான் உள்ளது. உடனே போய் அந்த பெண்ணை இழுத்து கொண்டு வா என்று கூறினார். அது அல்லாவின் வாய்ஸாகும்'' என்று கூறினார். மேலும் போலீஸ் விசாரணையில் பலமுறை அல்லா சொல்லி தான் இப்படி செய்ததாக அவர் கூறியுள்ளார்.
-
"அப்படியே ஓடிடுங்க.." தங்கம் அவுட், கேஷ் இன்.! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர் இதுதான் -
சவுதிக்கு விழுந்த அடி! ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல்.. அடிமடியில் கைவைத்த ஈரானால் ரூட் மாற்றம் -
தேனியில் ஓ பன்னீர்செல்வம் நினைத்தே பார்க்காதது.. கூண்டோடு விலகிய ஆதரவாளர்கள் எடுத்த முடிவு -
மீடியாவில் பேசாதீங்க.. தடுக்கப்படும் சங்கீதா.. விஜய் தரப்பில் 'மூவ்'? கோடிகளில் எகிறும் சமாதான தூது? -
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார்.. போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா அறிவிப்பு! -
உறுதியான காங்கிரஸ் திமுக கூட்டணி! அறிவாலய அலார்ம்! சத்தியமூர்த்தி பவன் சரண்டர்! அதிகாலை முடிந்த டீல் -
பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்யாத மேனேஜர்களுக்கு கோடிகளில் போனஸ்.. 173 கோடி சம்பளம் வாங்கும் சிஇஓ -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி சில்லென்ற சொகுசு: சென்னை டூ நெல்லை ரயில் பயணிகளுக்கு ரூ.25ல் பெரிய சர்ப்ரைஸ் -
அபிஷேக் சர்மா அவுட்.. ரிங்கு சிங் இன்.. அரையிறுதியில் மொத்தமாக மாறப்போகும் இந்திய பிளேயிங் லெவன்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
இத்தோடு விஜய் அரசியல் முடியனும்.. திமுக தீவிரம்.. காங்கிரசிடம் இறங்கிப் போய் கூட்டணி வைத்த ரகசியம்












Click it and Unblock the Notifications