13 வயது சிறுமி பலரால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை- உ.பியில் தொடரும் அட்டூழியம்
லக்னொ: உத்தர பிரதேசத்தில் 13 வயது சிறுமி பலரால் சேர்ந்து சீரழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டம் சப்தல்பூரை சேர்ந்த 13வயது சிறுமி மற்றொரு ஜாதியை சேர்ந்த இளைஞர்கள் சிலரால் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் சடலம் கரும்பு தோட்டத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தெரியவந்ததும் சிறுமியின் உறவினர்கள் மற்றும் ஜாதிக்காரர்கள், பிஜ்னோர்-புடான் மாநில நெடுஞ்சாலையில் நேற்றிரவு சாலை மறியல் போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசாரின் சமாதானத்தை அவர்கள் ஏற்கவில்லை.
மாவட்ட கலெக்டரே நேரில் வந்து ஆறுதல் கூறினார். கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள், மேலும், ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். இதன்பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. கலெக்டர் வாக்குறுதியளித்தபடி கொலையாளிகளில் 2பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசத்தில் அடிக்கடி இதுபோன்ற கொடூரமான பாலியல் பலாத்காரமும், கொலைகளும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications