உத்தர பிரதேசத்தில் பாலியல் வன்முறைக்கு 2 சிறுமிகள் பலி – 4 பேர் கைது
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் மரத்தில் தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அங்குள்ள உஸ்காய்த் பகுதியில் உள்ள காத்ரா கிராமத்தில் 14 மற்றும் 15 வயது கொண்ட இரண்டு சிறுமிகளை கடந்த செவ்வாய்கிழமை காணவில்லை. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். புகாரை ஏற்றுக் கொள்ள போலீசார் அப்போது மறுத்துள்ளனர்.
இந்நிலையில் சிறுமிகள் இருவரும் கொடூர கும்பலால் பாலியல் வன்முறை செய்யப்பட்டு கிராமத்தில் உள்ள மரத்தில் தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். சிறுமிகள் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று கண்பிடிக்கப்பட்டுள்ளனர்.
போலீஸ் அதிகாரிகளின் அக்கறையின்மையினாலே இந்த கொடூர செயல் நடத்துள்ளது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி போராட்டம் நடத்தியதை அடுத்து போலீசார் 7 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீஸ் கான்ஸ்டபிள் சார்வேஷ் யாதவ் மற்றும் ராக்ஷாபால் யாதவ் ஆகியோருக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும்,4 பேர் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுமிகள் கொலை செய்யப்பட்ட தகவல் அப்பகுதிகளில் பரவியதை அடுத்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் குவிக்கப்பட்டு நிலை சீர்படுத்தப்பட்டது.
சிறுமிகள் கொலை செய்யப்படுவதற்கு முன்னதாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர் என்று கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சிறுமிகளின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications