ஐ.எஸ்.ஐ.உடன் முஸ்லிம்களுக்கு தொடர்பு: ராகுல் புகாருக்கு உ.பி. அரசு மறுப்பு

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகர் முஸ்லிம்கள் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. உடன் தொடர்பு வைத்துள்ளதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்த புகாரை அம்மாநில அரசு மறுத்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகர் கலவரத்தில் உறவுகளை பலி கொடுத்ததற்கு பழிவாங்க முஸ்லிம் இளைஞர்கள் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.உடன் தொடர்பில் இருப்பதாக உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன என்று கூறியிருந்தார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ராகுலின் பேச்சுக்கு முஸ்லிம் மதகுருக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ராகுலின் குற்றச்சாட்டை உத்தரப்பிரதேச மாநில அரசும் மறுத்துள்ளது.

அம்மாநில உள்துறை செயலர் கமல் சக்சேனா, மாநில அரசுக்கு மத்திய உளவு அமைப்போ அல்லது உள்துறை அமைச்சகமோ முசாபர்நகர் முஸ்லிம்களுக்கும் ஐ.எஸ்.ஐ அமைப்புக்கும் இடையே தொடர்பு இருப்பதாக எந்த ஒரு தகவலையும் தெரிவிக்கவில்லை. நாங்கள் மிகவும் விழிப்புடனேயே இருக்கிறோம் என்று பதில் கொடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+