கொலைக்களமாகும் உ.பி – மீண்டும் மரத்தில் தொங்கவிடப்பட்டு இளம்பெண் கொலை
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் நேற்று மீண்டும் ஒரு இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்றதால் இந்தியாவே அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.
இந்தியாவில் பாலியல் குற்றங்களுக்கு பேர் போன மாநிலமாக உத்தர பிரதேசம் உருவாகி வருகின்றது.பாலியல் வன்முறையால் பெண் இனமே அழிந்து போகும் நிலை அங்கு உருவாகி வருகின்றது.
மேலும், கடந்த ஒருமாத காலமாக தொடர்ச்சியாக இளம்பெண்கள் பாலியல் வன்முறைக்கு பலியாகி வருகின்றனர்.அதுமட்டும் இல்லாமல் கொடூரத்தின் உச்சமாக அவர்களை கொலை செய்து, தூக்கிலும் தொங்க விட்டு விடுகின்றனர்.
தொடரும் இந்த கொடூரத்தின் புதிய கிளைக் கதையாக நேற்றும் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.அங்கு உள்ள அலிகார் மாவட்டத்தின் லோதா பகுதியில் உள்ள கோஷ்வர் கோயிலின் அருகில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் மரத்தில் உயிரிழந்த நிலையில் தொங்கவிடப்பட்டிருந்தார்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.இதுவும் பாலியல் வன்முறை சார்ந்த கொலையாக இருக்கக் கூடுமோ என்ற தகவல் வேகமாகப் பரவி வருகின்றது.












Click it and Unblock the Notifications