உத்தராகண்ட் சட்டசபையில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்- 144 தடை உத்தரவுடன் விவாதம்!
டேராடூன்: உத்தரகாண்ட் மாநில சட்டசபையில் பொது சிவில் சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொது சிவில் சட்ட மசோதா மீது உத்தரகாண்ட் சட்டசபையில் விவாதம் நடைபெற்று வரும் நிலையில் சட்டசபை வளாகப் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. உத்தரகாண் மாநில முதல்வராக புஷ்கர் சிங் தாமி மீண்டும் பொறுப்பேற்ற போது மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என உறுதி அளித்தார். 2 ஆண்டுகளுக்கு முன்னர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டத்திலும் உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த தீர்மானிக்கப்பட்டது.

இதனடிப்படையில் உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட இந்த குழுவில் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி பிரமோத் கோஹ்லி, உத்தராகண்ட் மாநிலத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் சத்ருஹன் சிங், டூன் பல்கலைக்கழக துணைவேந்தர் சுரேகா தங்வால், சமூக செயற்பாட்டாளர் மனு கவுர் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.

பொது சிவில் சட்டம் தொடர்பான இந்த குழு முதல்வர் புஷ்கர்சிங் தாமியிடம் இறுதி அறிக்கயை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் பொது சிவில் சட்ட மசோதா தயார் செய்யப்பட்டு மாநில அமைச்சரவையின் ஒப்புதலும் பெறப்பட்டது. இதனையடுத்து இன்று பொதுசிவில் சட்ட மசோதாவை உத்தரகாண்ட் சட்டசபையில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தாக்கல் செய்தார். இந்த பொது சிவில் சட்ட மசோதா மீது உத்தரகாண்ட் சட்டசபையில் விவாதம் நடைபெற்று வருகிறது.
#WATCH | Uttarakhand CM Pushkar Singh Dhami tables the Uniform Civil Code Uttarakhand 2024 Bill in State Assembly, in Dehradun. pic.twitter.com/B1LRzfoC09
— ANI (@ANI) February 6, 2024
பொது சிவில் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் உத்தரகாண்ட் மாநிலத்திலும் பதற்றம் நிலவுகிறது. இதனையடுத்து உத்தரகாண்ட் சட்டசபை வளாகப் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு இன்று விவாதம் நடைபெற்று வருகிறது.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications