உத்தரகாண்ட் காங். எம்.எல்.ஏ.க்களுக்கு லஞ்சம்... ஹரிஷ் ராவத்துக்கு எதிரான புதிய வீடியோவால் பரபரப்பு
டேராடூன்: உத்தரகாண்ட் சட்டசபையில் நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்வதற்காக தம்முடைய சொந்த கட்சியான காங்கிரஸின் எம்.எல்.ஏ.க்களுக்கு அம்மாநில முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத் லஞ்சம் கொடுக்க முயற்சித்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட உத்தராகண்ட் மாநிலத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நாளை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

இதில் வெற்றி பெற முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத், சொந்த கட்சியான காங்கிரஸின் எம்.எல்.ஏ.க்கள் 12 பேருக்கு தலா ரூ25 லட்சம் தர முன்வந்ததற்கான ரகசிய வீடியோ ஆதாரங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தலைவர்களின் தொலைபேசி உரையாடல்களை உளவுத் துறை மூலம் மத்திய அரசு ஒட்டுகேட்டு வருவதாகவும் தேசவிரோதியை போல என்னையும் உளவுத் துறையினர் கண்காணித்து வருகின்றனர் என ஹரிஷ் ராவத் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த வாரமும் ஹரீஷ் ராவத், எம்.எல்.எல்.ஏ.க்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக ஒரு வீடியோ வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications