உத்தரகாண்ட்டில் 19-ந் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் 'இந்திரா அம்மா' மலிவு விலை உணவகங்கள்!
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி வரும் 19-ந் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் 'இந்திரா அம்மா' மலிவு விலை உணவகங்களை திறக்க உள்ளது.
தமிழகத்தில் 'அம்மா' உணவகங்களை ஆளும் அ.தி.மு.க. அரசு தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இந்த மலிவு விலை உணவகங்களை இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள், அரசு அதிகாரிகள் பார்வையிட்டு சென்றுள்ளனர்.

டெல்லி மாநில அரசும் அம்மா உணவகம் பாணியில் மலிவு விலை உணவகத்தைத் தொடங்குவதாக அறிவித்தது.
இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு கடந்த ஆகஸ்ட் 15-ந் தேதியன்று 'இந்திரா அம்மா மலிவு விலை உணவகத்தை' திறந்தது.
இதனைத் தொடர்ந்து வரும் 19-ந் தேதி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் 'இந்திரா அம்மா' மலிவு விலை உணவகங்களைத் திறக்க ஏற்பாடுகளை செய்துள்ளது. இதற்காக மாவட்டங்கள் தோறும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு டேராடூனில் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications