உருது மொழிக்கு மாற்றாக சமஸ்கிருதம்.. உத்தரகாண்ட் ரயில் நிலையங்களில் வருகிறது அதிரடி மாற்றம்
டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் டேராடூன் ரயில் நிலையத்தில் ஊர் பெயர் பலகைகள் உருது மொழிக்கு பதிலாக சமஸ்கிருதத்தில் மாற்றப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
பிரபல ஆங்கிலம் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்திகளின்படி , ரயில்வே அதிகாரிகள் இது பற்றி கூறுகையில் ரயில்வே பதிவேட்டில் உள்ள விதிகளின்படி, ரயில் நிலையங்களின் பெயர்கள் இந்தி, ஆங்கிலம் மற்றும் அந்த குறிப்பிட்ட மாநிலத்தின் இரண்டாவது அதிகாரப்பூர்வ மொழியில் இருக்க வேண்டும்.

2010ஆம் ஆண்டு, உத்தராகண்ட் அரசாங்கம், அம்மாநிலத்தின் இரண்டாம் மொழி அந்தஸ்தை சமஸ்கிருதத்திற்கு அளித்து அதிகாரப்பூர்வ ஆணையை வெளியிட்டு இருந்தது. இந்தியாவில் முதன்முதலாக சமஸ்கிருதத்தை அலுவல் மொழியாக அறிவித்தது உத்தராகண்ட் மாநிலம் தான்.
எனவே இனி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் உள்ள பெயர் பலகைகள் உருது மொழிக்கு பதிலாக சமஸ்கிருதத்தில் மாற்றப்படும். தற்போது இந்தி, ஆங்கிலம் மற்றும் உருதுவில் எழுதப்பட்டிருக்கும் பலகைகள், இனி இந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதத்திற்கு மாற்றப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.
உத்தரகாண்ட் முதல்வர் ரமேஷ் போக்ரியல், சமஸ்கிருத மொழியை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறி 2010ம் ஆண்டு 2வது அலுவல் மொழியாக அறிவித்தது. இதே பாணியில் 2019ல் இமாச்சல பிரதேசமும் சமஸ்கிருதத்தை அலுவல் மொழியாக அறிவித்தது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications