உத்தரகாண்ட் - டைம்ஸ் நவ் எக்ஸிட் போல் முடிவுகள் : ஆட்சியமைக்கும் பாஜக.. டஃப் கொடுக்கும் காங்கிரஸ்
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் 37 இடங்களில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் வாய்ப்பு இருப்பதாக டைம்ஸ் நவ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது,
உத்தரப்பிரதேசம் மணிப்பூர் கோவா உத்தரகண்ட் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை பதவிக்காலம் நிறைவடைந்து எடுத்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அங்கு தேர்தல் தேதிகளை அறிவித்தது.
மொத்தம் அங்கு 70 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக 46.51% வாக்குகளுடன் 56 இடங்களில் வெற்றி பெற்றது.

உத்தரகாண்ட் தேர்தல்
அடுத்ததாக காங்கிரஸ் கட்சி 33.49% வாக்குகளுடன் 11 இடங்களில் வென்று இரண்டாவது இடத்தை பெற்றது. தற்போதைய முதல்வராக புஷ்கர் சிங் தாமி உள்ள நிலையில், தற்போது தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்நிலையில் தற்போதும் பாஜகவே உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் என டைம்ஸ் நவ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பாஜகவுக்கே வாய்ப்பு
அதன்படி தற்போதைய ஆளும் கட்சியான பாஜகவே மீண்டும் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆட்சியமைக்கும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி மொத்தமுள்ள 70 சட்டமன்ற தொகுதிகளில் பாஜக 37 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளதாக டைம்ஸ் நவ் கூறியுள்ளது. இது தனிப் பெரும்பான்மையை விட 2 இடங்கள் கூடுதலாகும்.

31 இடங்களில் காங்கிரஸ்
இதற்கு அடுத்தபடியாக பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் மொத்தமுள்ள 70 இடங்களில் 31 இடங்களை பெற்று மீண்டும் பிரதான எதிர்கட்சி வரிசையில் அமரும் எனவும் அந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 33.49% வாக்குகளுடன் 11 இடங்களில் வென்று இரண்டாவது இடத்தை பெற்ற நிலையில், தற்போது அக்கட்சி கூடுதலாக 20 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மிக்கு ஏமாற்றம்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி 1 இடத்தில் மட்டும் வெற்றி பெரும் என கூறப்பட்டுள்ளது. இது அக்கட்சிக்கும் பெரிதும் பின்னடைவாக கருதப்படுகிறது. மேலும் இதர கட்சிகள் சுயேட்சை என 2 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பிருப்பதாகவும் டைம்ஸ் நவ் நடத்திய கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. தற்போதைய முதல்வரான புஷ்கர் சிங் தாமி மீண்டும் முதல்வராக பதவியேற்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications