புலிகள் தடை மீதான தீர்ப்பாய வழக்கு: விசாரணையில் பங்கேற்க வைகோவுக்கு அனுமதி!
டெல்லி: தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை நீட்டிக்கப்பட்டது தொடர்பான வழக்கில், மதிமுக பொதுச்செயலர் வைகோ விசாரணையில் பங்கேற்று வாதங்களை முன்வைக்கலாம் என்றும் அதே நேரத்தில் அவரை ஒரு தரப்பாக சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு 2013ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, 2 ஆண்டுகள் தடையை 5 ஆண்டுகளாக நீட்டித்துச் சட்டத் திருத்தம் செய்தது.

அதன்படி, இந்த ஆண்டு மே மாதம் புலிகள் மீதான தடை 5 ஆண்டுகள் என்று அறிவிக்கப்பட்டது. அந்தத் தடையை நீக்கக் கோரி தம்மையும் ஒரு தரப்பாகத் தீர்ப்பாய விசாரணையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று தீர்ப்பாயத்தில் வைகோ மனு தாக்கல் செய்து இருந்தார்.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பாய நீதிபதி மிட்டல் முன்பு நேற்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. வைகோ தமது கோரிக்கையாக இந்த விசாரணையில் தமது தரப்பு வாதங்களை முன்வைக்க அனுமதி வேண்டும். 2010 ஆம் ஆண்டு தீர்ப்பாய விசாரணையில், என்னை ஒரு தரப்பாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், விசாரணை அமர்வுகளில் பங்கு ஏற்கவும், என் வாதங்களை முன்வைக்கவும் தீர்ப்பாய நீதிபதி அனுமதித்தார்.
மீண்டும் 2012 ஆம் ஆண்டில் தீர்ப்பாய நீதிபதி ஜெயின் முன்பும், அதுபோன்ற மனுவைத் தாக்கல் செய்தேன். அவரும், முந்தைய தீர்ப்பாயம் அனுமதித்ததைப் போல அனுமதியளித்தார். எனவே என்னை இந்த அமர்வில் ஒரு தரப்பாகச் சேர்க்க வேண்டுகிறேன். அதற்கு வாய்ப்பு இல்லையேல், விசாரணையில் பங்கு ஏற்று என் வாதங்களை முன்வைப்பதற்கு அனுமதிக்க வேண்டுகிறேன் என்றார்.
இதற்கு மத்திய அரசு வழக்கறிஞர் சஞ்சய் ஜெயின், விடுதலைப்புலிகளின் அமைப்பில் பொறுப்பாளராகவோ, உறுப்பினராகவோ வைகோ இல்லை. எனவே அவரை ஒரு தரப்பாக ஏற்கக் கூடாது என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மிட்டல், வைகோவை ஒரு தரப்பாக இந்த விசாரணையில் சேர்க்க முடியாது. ஆனால் அவர் இந்த அமர்வு விசாரணையில் பங்கு ஏற்கவும், வாதங்களை முன்வைக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது. புலிகள் தடை மீதான தீர்ப்பாய விசாரணை செப்டம்பர் 26, 27 தேதிகளில் சென்னையில் நடைபெறும் என்று அறிவித்தார்.
இவ்வாறு மதிமுக தலைமைக் கழக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள்












Click it and Unblock the Notifications