புலிகள் தடை மீதான தீர்ப்பாய வழக்கு: விசாரணையில் பங்கேற்க வைகோவுக்கு அனுமதி!
டெல்லி: தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை நீட்டிக்கப்பட்டது தொடர்பான வழக்கில், மதிமுக பொதுச்செயலர் வைகோ விசாரணையில் பங்கேற்று வாதங்களை முன்வைக்கலாம் என்றும் அதே நேரத்தில் அவரை ஒரு தரப்பாக சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு 2013ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, 2 ஆண்டுகள் தடையை 5 ஆண்டுகளாக நீட்டித்துச் சட்டத் திருத்தம் செய்தது.

அதன்படி, இந்த ஆண்டு மே மாதம் புலிகள் மீதான தடை 5 ஆண்டுகள் என்று அறிவிக்கப்பட்டது. அந்தத் தடையை நீக்கக் கோரி தம்மையும் ஒரு தரப்பாகத் தீர்ப்பாய விசாரணையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று தீர்ப்பாயத்தில் வைகோ மனு தாக்கல் செய்து இருந்தார்.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பாய நீதிபதி மிட்டல் முன்பு நேற்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. வைகோ தமது கோரிக்கையாக இந்த விசாரணையில் தமது தரப்பு வாதங்களை முன்வைக்க அனுமதி வேண்டும். 2010 ஆம் ஆண்டு தீர்ப்பாய விசாரணையில், என்னை ஒரு தரப்பாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், விசாரணை அமர்வுகளில் பங்கு ஏற்கவும், என் வாதங்களை முன்வைக்கவும் தீர்ப்பாய நீதிபதி அனுமதித்தார்.
மீண்டும் 2012 ஆம் ஆண்டில் தீர்ப்பாய நீதிபதி ஜெயின் முன்பும், அதுபோன்ற மனுவைத் தாக்கல் செய்தேன். அவரும், முந்தைய தீர்ப்பாயம் அனுமதித்ததைப் போல அனுமதியளித்தார். எனவே என்னை இந்த அமர்வில் ஒரு தரப்பாகச் சேர்க்க வேண்டுகிறேன். அதற்கு வாய்ப்பு இல்லையேல், விசாரணையில் பங்கு ஏற்று என் வாதங்களை முன்வைப்பதற்கு அனுமதிக்க வேண்டுகிறேன் என்றார்.
இதற்கு மத்திய அரசு வழக்கறிஞர் சஞ்சய் ஜெயின், விடுதலைப்புலிகளின் அமைப்பில் பொறுப்பாளராகவோ, உறுப்பினராகவோ வைகோ இல்லை. எனவே அவரை ஒரு தரப்பாக ஏற்கக் கூடாது என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மிட்டல், வைகோவை ஒரு தரப்பாக இந்த விசாரணையில் சேர்க்க முடியாது. ஆனால் அவர் இந்த அமர்வு விசாரணையில் பங்கு ஏற்கவும், வாதங்களை முன்வைக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது. புலிகள் தடை மீதான தீர்ப்பாய விசாரணை செப்டம்பர் 26, 27 தேதிகளில் சென்னையில் நடைபெறும் என்று அறிவித்தார்.
இவ்வாறு மதிமுக தலைமைக் கழக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications