டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் வருண் வைகோ
Subscribe to Oneindia Tamil
நாக்பூர்: 14 வயதுக்குட்டவர்களுக்கான அகில இந்திய டென்னிஸ் சங்க சாம்பியன்ஷிப் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் வருண் வைகோ.

மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அரசியலில் கலக்கினால் பேரன் 'வருண் வைகோ' டென்னிஸில் கலக்குகிறார்.
தேசிய மற்றும் மாநில அளவில் நடந்த பல்வேறு டென்னிஸ் போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடி வருகிறார் வருண் வைகோ.

கடந்த ஞாயிறு அன்று நாக்பூரிலுள்ள சி.பி.டென்னிஸ் சென்டரில் நடந்த போட்டியில் அவர் தனது போட்டியாளரான மல்ஹர் பேகேவை 6-2, 6-1 என்ற செட் கணக்கில் மண்ணைக் கவ்வச் செய்து 14 வயதுக்குட்பட்டோர் போட்டியின் ஆண்கள் பிரிவில் கோப்பையை கைப்பற்றினார்.

வைகோ அவர்களின் பேரனான வருண் வைகோ தற்போது டென்னிஸ் தர வரிசையில் 6ஆவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications