வாஜ்பாய்.. நாளை மாலை இறுதிச் சடங்கு.. முக்கிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள்
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி சடங்கு நாளை மாலை 5 மணிக்கு நடக்க உள்ளது.
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி சடங்கு நாளை மாலை 5 மணிக்கு நடக்க உள்ளது.
இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவரான முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணம் அடைந்துள்ளார். இவர் 93 வயதில் மரணம் அடைந்துள்ளார். அவர் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார்.
அவரது மறைவிற்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
வாஜ்பாயின் இறுதி சடங்கு நாளை மாலை 5 மணிக்கு நடக்க உள்ளது. டெல்லி விஜய்காட்டில் வாஜ்பாய் இறுதிச் சடங்குகள் நடைபெறும்.
இந்தியாவின் முக்கிய தலைவர்கள் இறுதி சடங்கில் பங்கேற்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, சோனியா காந்தி, அத்வானி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இறுதி சடங்கில் பங்கேற்க உள்ளார்.