மோடி தொகுதியில் இளம்பெண் எரித்துக் கொலை - மூன்று பேர் கைது

Subscribe to Oneindia Tamil

வாரணாசி: பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியில் லல்லாபுரா பகுதியில் வசித்து வரும் 19 வயது பெண்ணை மூன்று வாலிபர்கள் வீடு புகுந்து மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்தனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

12 ஆம் வகுப்பு படித்து வந்த அந்தப் பெண் பள்ளிக்குப் போகும்போது மூன்று வாலிபர்கள் வழிமறித்து பாலியல் தொந்தரவு செய்தனர். இதனை அந்தப் பெண் கண்டித்து எச்சரித்துள்ளார்.

இச்சம்பவம் நடைபெற்ற சில நாட்களுக்குப் பிறகு, கடந்த 18 ஆம் தேதி அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த மூன்று பேரும் அவரது தாயாரின் கண்ணெதிரிலேயே அந்தப் பெண்ணின் உடல் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துள்ளனர்.

உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அந்தப் பெண் கடும் தீக்காயங்களின் காரணமாக இன்று அதிகாலை இறந்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், இந்த கொடூர சம்பவத்திற்குக் காரணமான மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+