தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கினால் முழு அடைப்பு.. வாட்டாள் நாகராஜ் வார்னிங்!
தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கக்கூடாது என வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video

பெங்களூரு: தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கக்கூடாது என்றும் வழங்கினால் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்றும் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் கடந்த 2ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஆணையத்தின் தலைவர் மசூத் அசார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி என நான்கு மாநில உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நதிநீர் பங்கீடு தொடர்பாக தீவிரமாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் ஜூலை மாத பங்காக தமிழகத்துக்கு 31 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

7ஆம் தேதி போராட்டம்
இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் இந்த உத்தரவுக்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்த்து வரும் 7-ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகள் அறிவித்துள்ளன.

போராட்டம் நடத்தப்படும்
தமிழகத்திற்கு 31 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்ற ஆணையத்தின் உத்தரவை ஏற்று கொள்ள முடியாது என்று ஒன்றுபட்ட கன்னட அமைப்புகளின் தலைவர் வாட்டாள் நாகராஜ் கூறியுள்ளார். காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மாநிலம் தழுவிய பந்த்
காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்த்து வரும் 10-ம் தேதி அனைத்து கன்னட அமைப்புகளும் ஒன்று சேர்ந்து கூட்டமொன்று நடத்த முடிவு செய்துள்ளதாக கூறினார். அந்த கூட்டத்தில் மாநிலம் தழுவிய பந்த் நடத்துவது பற்றி முடிவு செய்யப்படும் என்றார்.

போராட்டம் அறிவிப்பு
காவிரி மேலாண்மை ஆணையம் தங்களுக்கு தேவையில்லை என கன்னட அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் கன்னட அமைப்புகள் போராட்டம் அறிவித்துள்ளது நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications