வேண்டுமென்றே சீண்டுகிறது தமிழகம்.. தண்ணீர் திறக்கவே கூடாது: வாட்டாள் நாகராஜ் #Cauveryverdict
பெங்களூர்: சுப்ரீம் கோர்ட் உத்தரவை ஏற்று, காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் விட, கன்னட சலுவளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழகம் வேண்டுமென்றே கர்நாடகாவை சீண்டிக்கொண்டுள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் மூன்று நாட்களுக்கு தமிழகத்திற்கு தண்ணீர்விடுமாறு சுப்ரீம் கோர்ட் கர்நாடகாவுக்கு உத்தரவிட்ட நிலையில், கன்னட டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த வாட்டாள் நாகராஜ் மேலும் கூறியதாவது: கர்நாடகாவிடம் குடிக்கவே தண்ணீர் இருப்பு இல்லை. எனவே தமிழகத்துக்கு தண்ணீர் தர கூடாது.
கர்நாடகாவின் நிலைமையை தெரிந்து கொண்ட பிறகும்கூட, கர்நாடகாவை வேண்டுமென்றே தமிழகம் சீண்டி பார்க்கிறது. இந்த விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக தலையிட வேண்டும்.
ஒரு குழுவை அமைத்து, இரு மாநில நீர் இருப்பையும், சோதித்து பார்த்துவிட்டு சுப்ரீம்கோர்ட் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார்.