இந்தியிலேயே பேசுங்க..... ராஜ்யசபா எம்.பி..க்களுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வேண்டுகோள்
இந்தியிலேயே எம்.பிக்கள் பேச வேண்டும் என்று வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Recommended Video
டெல்லி: இந்தியிலேயே எம்.பிக்கள் பேச வேண்டும் என்று ராஜ்யசபா தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராஜ்யசபாவின் இந்தி மொழி தொடர்பான ஆய்வு கூட்டம் மூன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய வெங்கையா நாயுடு, ஆண்டு தோறும் இந்தி தொடர்பாக 2 ஆய்வு கூட்டங்களையாவது நடத்த வேண்டும்; ராஜ்யசபா செயலகத்தில் இந்தி மொழியை பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மேலும் வெங்கையா நாயுடு பேசியதாவது: இந்தி பேசாத மாநிலங்களின் ராஜ்யசபா எம்.பி.க்கள் இலக்கண பிழைகள் குறித்து அச்சம் கொள்ளாமல் இந்தியில் பேச வேண்டும். நான் முதன் முதலில் டெல்லி வந்த போது இந்தி எனக்கு தெரியாது. ஆனால் குறுகிய காலத்திலேயே எந்த தயக்கமும் இல்லாமல் இந்தி பேச தொடங்கிவிட்டேன்.
வட இந்தியர்களும் தென்னிந்திய மொழிகளில் ஒன்றை கற்றுக் கொள்ள வேண்டும். இது நாட்டின் ஒற்றுமையை வலிமைப்படுத்தும். இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.