கன்னியாஸ்திரி பலாத்காரத்துக்கு கவலைப்படும் போப் ஓரினச்சேர்க்கையை ஆதரிக்க கூடாது: வி.ஹெச்.பி.
டெல்லி: மேற்கு வங்கத்தில் கன்னியாஸ்திரி பலாத்காரம் செய்யப்பட்டதற்கு கவலைப்படும் போப் ஆண்டவர் ஓரினச்சேர்க்கையை ஆதரிக்காமல் இருக்கட்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் செயலாளர் சுரேந்திர ஜெயின் கூறியுள்ளார்.
மேற்குவங்க மாநிலம் நாடியாவில் கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் செயலாளர் சுரேந்திர ஜெயின் கூறியதாவது:
கன்னியாஸ்திரிகள் மீதான பாலியல் தாக்குதல் கிறிஸ்தவர்களின் கலாசாரம். அது இந்துகளின் கலாசாரம் இல்லை. போப் ஆண்டவரின் வாடிகனுக்கு பலாத்காரம் தொடர்பாக 5 ஆயிரம் புகார்கள் வந்திருக்கின்றனவே...

கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதில் போப் கவலை அடைந்திருந்தார் என்றால் ஓரினசேர்க்கையை ஊக்குவிப்பதை அவர் முதலில் நிறுத்தட்டும்.
ஹிசாரில் கிறிஸ்தவ ஆலயம் தாக்கப்பட்டது என்பது மக்களின் தன்னிச்சையான எதிர்ப்புதான்.. அக் கிராமத்தில் கிறிஸ்தவர்கள் யாரும் வசிக்கவில்லை. கிறிஸ்தவ ஆலயம் இடிக்கப்பட்ட பகுதியை சுற்றிலும் கிறிஸ்தவர்கள் கிடையாது. பிறகு ஏன் அங்கு கிறிஸ்தவ ஆலயம் கட்டப்பட வேண்டும்?
கிறிஸ்தவர்கள் வாடிகனில் ஹனுமான் கோவில் கட்டுவதற்கு அனுமதி அளிப்பார்களா? அவர்கள் முதலில் இதனை அனுமதிக்கட்டும். பின்னர் இந்தியாவில் எந்தபகுதியில் வேண்டுமென்றாலும் கிறிஸ்தவ ஆலயம் கட்டுவதற்கு இடத்தை தேர்வு செய்ய நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். நாங்கள் நிதியும் வழங்குவோம்.
கிறிஸ்தவர்கள் தேவாலயங்களை கட்டுவதை நிறுத்தவில்லை என்றால் கி.பி. 1857 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது போல் மீண்டும் ஒரு மதகலவரம் முன்னெடுக்கப்படும்.
இவ்வாறு சுரேந்திர ஜெயின் கூறினார்.
-
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications