மோடி மீது மனிதவெடிகுண்டு தாக்குதல் நடத்த தாவூத் கும்பல் சதி: ஜனாதிபதிக்கு வி.ஹெச்.பி. கடிதம்!!
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியிருப்பதால் கூடுதல் பாதுகாப்பு அளிக்க கோரி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தின் தலைவர் அசோக் சிங்கால் கடிதம் அனுப்பியுள்ளார்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அசோக் சிங்கால் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை விடுதலைப் புலிகள் இலக்கு வைத்து தற்கொலைப்படை மூலம் தாக்குதல் நடத்தி கொலை செய்ததைப் போல பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் மோடியையும் தீவிரவாதிகள் குறி வைத்துள்ளனர்.
தற்போது லோக்சபா தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இத்தகைய தாக்குதல்கள் நடக்க வாய்ப்பிருப்பதாக கவலைப்படுகிறோம். இதனால் அவருக்கான பாதுகாப்பை அதிகப்படுத்தி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
நாட்டின் உளவுப் பிரிவும் கூட மோடிக்கு இத்தகைய அச்சுறுத்தல் இருப்பதை உறுதி செய்துள்ளது. மோடி மீது துப்பாக்கிச் சூடு ஏதும் நடத்தாமல் தற்கொலைப்படை நடத்தவே தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவு அமைப்பான ஐ.பி.யின் எச்சரிக்கை குறிப்பு தெரிவிக்கிறது.
இந்தியன் முஜாஹிதீன், பாகிஸ்தானின் உளவுத்துறை மற்றும் நிழல் உலக தாதா தாவ்வூத் மற்றும் அவர்களது கூட்டாளிகளே மோடியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். அண்மையில் தாவூத் இப்ராகிமை இந்தியாவுக்கு நாடு கடத்துவேன் என்று மோடி எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து இந்த அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.
இவ்வாறு விஸ்வ ஹிந்து பரிஷத் அந்த கடிதத்தில் கூறியுள்ளது.
-
இந்திய கப்பல்களுக்கு அனுமதி? ஈரான் அதிபருக்கு போன் போட்ட மோடி! பிரச்சனை தீருமா! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு












Click it and Unblock the Notifications