Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாதி எரிந்த பிணம்.. அரைவேக்காடு சடலத்தை வெளியே எடுத்து.. 72 வயது முதியவருக்கு நேர்ந்த கொடுமை

கொரோனா பாதித்த முதியவரின் சடலத்தை எரிக்க தடை செய்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

ஜம்மு: பாதி எரிந்தும்.. பாதி வெந்த நிலையிலும் கிடந்த சடலத்தை வெளியே எடுத்து கொண்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. இது எல்லாத்துக்கும் காரணம் அந்த கொரோனாதான்!!

லாக்டவுன் 5வது முறையாக போட்டும் இன்னும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த முடியவில்லை.. கொரோனாவால் உயிரிழப்பது கொடுமை என்றால், உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வது என்பதை அதைவிட கொடுமையாக உள்ளது!!

victims family attacked amid funeral and escaped with half burnt body near jammu

இப்படித்தான் ஜம்மு-காஷ்மீர் தோடா மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. 72 வயது முதியவர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டது. இதனால் அவரை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர்.

அதனால் எரிந்து கொண்டிருந்த சடலத்தை வெளியே எடுத்தனர்.. திரும்பவும் ஒரு ஆம்புலன்ஸை வரவழைத்து வெந்தும், வேகாத சடலத்தை அதில் ஏற்றி பவானி நகர் பகுதியில் தகனம் செய்யும் இடத்திற்கு கொண்டுசென்று அங்கு வைத்து எரித்துள்ளனர்.. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்றாலும், பெருத்த அதிர்ச்சியையும் கவலையும் தந்து வருகிறது.

இந்த விஷயம் அப்பகுதியில் குடியிருந்தவர்களுக்கு தெரிந்துவிட்டது.. எல்லோரும் ஒன்றுசேர்ந்து கொண்டு கும்பலாக திரண்டு வந்து சடலத்தை எரிக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.. மேலும் கையில் கிடைத்த கற்களை தூக்கி வீசினர்.. கம்புகளை எடுத்து வந்து குடும்பத்தினர் மீது எறிந்தனர். சடலமோ பாதி எரிந்து கொண்டிருந்தது.. அந்நிலையிலும் அவர்களின் தாக்குதல் தொடர்ந்து கொண்டே இருந்தது.

அதனால் எரிந்து கொண்டிருந்த சடலத்தை வெளியே எடுத்தனர்.. திரும்பவும் ஒரு ஆம்புலன்ஸை வரவழைத்து வெந்தும், வேகாத சடலத்தை அதில் ஏற்றி பவானி நகர் பகுதியில் தகனம் செய்யும் இடத்திற்கு கொண்டுசென்று அங்கு வைத்து எரித்துள்ளனர்.. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்றாலும், பெருத்த அதிர்ச்சியையும் கவலையும் தந்து வருகிறது.

கொரோனோ பாதிப்பால் உயிரிழந்தவர்களுக்கு இறுதி சடங்குகளை மேற்கொள்ளவும், அவர்களது சடலங்களை புதைக்கவும் அரசு பல வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது... ஆனாலும் மக்களுக்கு இன்னும் அந்த பீதி போகவில்லை.. தொற்று பரவிவிடும் என்று பலமாக நம்பப்பட்டு வருகிறது. அதனால் இந்த விஷயத்தில் இன்னமும் விழிப்புணர்வு தேவையானதாக இருக்கிறது.. அதேசமயம் மனிதாபிமானங்களின் எல்லைகள் எப்படி இருக்கின்றன என்பதையும் கொரோனா நமக்கு உணர்த்தியபடியே உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+