நாம் யானையை எப்படி பார்க்கிறோம்.. யானை நம்மை எப்படி பார்க்கிறது? நீங்களே பாருங்க!
ராய்ப்பூர்: நாம் யானையை எப்படி பார்க்கிறோம்.. யானை எப்படி நம்பை பார்க்கிறது என்பதற்கு இந்த வீடியோவை சாட்சி... நீங்களே பாருங்கள்
விலங்குகளில் புத்திசாலியான விலங்கு. யானை மனிதர்களை தேடி வந்து ஒரு போதும் தாக்காது. ஆனால் யானையின் வழித்தடங்களில் குறுக்கிடும் போது தான் மனிதர்களைத் தாக்குகின்றன.
அப்படிப்பட்ட சூழலில் சில கொடூரர்கள் யானைகளை தங்களின் சுயநலத்திற்காக மின்சார வேலிகளை வைத்து யானைகளை கொல்கிறார்கள். அண்மையில் டயரில் நெருப்பை பற்றவைத்து யானை சிலர் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கரைசேர்ந்த யானை
உண்மையில் யானைகள் மிகவும் நல்லவை. புத்திசாலியும் கூட. தன்னை கண்ணாடியில் அடையாளம் கண்டுகொள்ளக் கூடிய விலங்கு யானைகள் மற்ற விலங்குகளுக்கு உதவும் குணம் கொண்டவையாகும். காட்டில் குளித்துக் கொண்டிருந்தவர் ஆற்றில் அடித்துச் செல்லப்படுவதால் தெரிந்ததால் ஓடிச் சென்று உதவி அவரை கரை சேர்த்துள்ளது யானை.

முதலை
இதேபோல் பல முறை யானைகள் மனிதர்களுக்கு உதவி உள்ளது. முன்பு ஒரு முறை முதலையிடம் சிக்கிய காட்டு மாட்டை ஒரு யானை காப்பாற்றியது. இதுபற்றிய வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது.

செங்குத்தான பாதை
யானைகள், மனிதர்களை அடையாளம் காண வல்லவை. பொதுவாக யானைக ஊனமுற்றோரை தாக்குவதில்லை என்று சொல்கிறார்கள். யானைகள் செங்குத்தான பாதைகளிலும் சர்வ சாதாரணமாகச் செல்லும். கூட்டமாக வரும் யானைகளால் ஆபத்துக்கள் குறைவு. ஒன்றை யானை மட்டும் தனியாக வலம் வரும் போது தான் அவை தன்னை சீண்டுபவர்களை தாக்கிவிடும். குட்டி யானை அல்லது தாய் யானை இறந்தால் அந்த இடத்தைவிட்டு செல்லாமல் கதறி அழுது அங்கேயே வட்டமடிக்கும் குணம் உடையவை யானைகள். மனிதர்களை போல் இறந்த யானைகளுக்காக அவை துக்கப்படும் என்பது மறுக்க முடியாத உண்மை.
|
உணர மறுக்கும் மனிதன்
மனிதர்கள் தங்கள் சுயநலத்திற்காக, இயற்கை சமநிலையைச் சிதைத்து காடு, மலைகளை அழித்து, பல முக்கிய பகுதிகளில் பல்லுயிர் பெருக்கத்திற்குக் கள்ளிப்பால் ஊற்றிவிட்டார்கள்.காடுகளை அழித்து தனக்கு தேவையான சொகுசு பங்களாக்களை, பணம் தரும் தேயிலை காடுகளை உருவாக்கிவிட்டார்கள். உண்மையில் பணம் தரும் தேயிலை காடுகளை பசுமை பாலைவனம் என்று வேண்டுமானால் அழைக்கலாம். இப்படி தனக்கு வேண்டியதற்காக காடுகளை அழித்த காரணத்தால் தான் அங்கே தங்களுக்கான வசதிகளுடன் சுற்றித் திரிந்த யானை உள்ளிட்ட விலங்குகள், வழி மாறி, உணவு, தண்ணீர் தேவைக்காகக் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைகின்றன. மோதல்களும் நடக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications