மல்லையா வெளிநாட்டுக்குப் போனது கூட தெரியாமல் தடுக்கக் கோரி வழக்குப் போட்ட 17 வங்கிகள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: விஜய் மல்லையா வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முயற்சிக்கிறார். அவரை வெளிநாடு செல்லவிடாமல் தடுக்க வேண்டும் என்று கோரி 17 வங்கிகளின் சார்பில் நேற்று உச்சநீதிமன்றத்தில் வழக்கத் தொடுத்தன. ஆனால் "பார்ட்டி" ஏற்கனவே நாட்டை விட்டுப் போய் விட்டார். அது கூட தெரியாத அளவில் வங்கிகள் உஷாராக இருந்துள்ளன.

அவர் மார்ச் 2ம் தேதியே போய் விட்டார். வங்கிகள்தான் மிக மிக தாமதமாக கோர்ட்டுக்கு வந்துள்ளன. கிட்டத்தட்ட ரூ. 10,000கோடி அளவுக்கு வங்கிகளிடம் கடன் வாங்கியுள்ளார் விஜய் மல்லையா. இதை இவரது நிறுவனங்கள் திருப்பிச் செலுத்தாமல் டபாய்த்து விட்டன.

இதையடுத்து தனது யுபி நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை இங்கிலாந்தின் டியாஜியோ நிறுவனத்திடம் விற்று விட்டார் மல்லையா. மேலும் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்தும் விலகி விட்டார். இதற்கு மாறாறாக டியாஜியோ நிறுவனம் ரூ. 515 கோடியை மல்லையாவுக்கு அளித்தது.

கோர்ட்டுக்குப் போன வங்கிகள்

கோர்ட்டுக்குப் போன வங்கிகள்

இதனால் எந்த நேரத்திலும் மல்லையா லண்டனுக்குக் கிளம்பிப் போய் விடலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதையடுத்து பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 13 வங்கிகள் சார்பில் பெங்களூர் கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் ஒரு மனு போடப்பட்டது. அதை விசாரித்த தீர்ப்பாயம், லண்டன் நிறுவனம் அளித்த ரூ. 515 கோடியை மல்லையா எடுக்கக் கூடாது என்று தடை விதித்தது.

சுப்ரீம் கோர்ட்டில் புது வழக்கு

சுப்ரீம் கோர்ட்டில் புது வழக்கு

இதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் ஒரு புதிய வழக்கை நேற்று 13 வங்கிகளும் போட்டன. அதில், தங்களுக்குத் தர வேண்டிய கடன் பாக்கியைத் திருப்பித் தராமல், மல்லையாவை வெளிநாட்டுக்குப் போக அனுமதிக்கக் கூடாது என்று கோரியிருந்தன.

அட்டர்னி ஜெனரல்

அட்டர்னி ஜெனரல்

இந்த வழக்கில் வங்கிகள் சார்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி ஆஜராகி, மல்லையா லண்டனில் செட்டிலாகத் திட்டமிட்டுள்ளார். அதைத் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

கடன் கொடுத்த வங்கிகள்

கடன் கொடுத்த வங்கிகள்

அப்பாவி மக்களுக்கு கடன் கொடுக்கவும், கடனைத் திரும்பவும் அடாவடியாக செயல்படும் வங்கிகள் இப்போது மலை முழுங்கி மல்லையாவிடம் சிக்கித் தவிக்கின்றன. இவைதான் அந்த "அப்பாவி" வங்கிகள் - ஸ்டேட் பாங்க், பஞ்சாப் நேஷனல் பாங்க், பாங்க் ஆப் பரோடா, ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், யுகோ பாங்க், யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் அன்ட் சிந்த் வங்கி, ஆக்சிஸ் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, பெடரல் பாங்க், ஐடிபிஐ.

மார்ச் 2ம் தேதியே எஸ்கேப்!

மார்ச் 2ம் தேதியே எஸ்கேப்!

ஆனால் மார்ச் 2ம் தேதியே மல்லையா நாட்டை விட்டுப் போய் விட்டார். இதுகுறித்து அவரது செய்தித் தொடர்பாளரிடம் கேட்டால், அவர் எங்கிருக்கிறார் என்பது தனக்குத் தெரியாது. அதுகுறித்து என்னிடம் எந்தத் தகவலம் இல்லை என்று கூறியிருந்தார்.

மெயில் மூலமாகத்தான்

மெயில் மூலமாகத்தான்

மேலும் அவர் கூறுகையில் மல்லையாவுக்கும் எனக்கும் இடையே மெயில் மூலமாகத்தான் தொடர்புகள் உள்ளன என்றும் அந்த செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

எங்கு போயிருப்பார்?

எங்கு போயிருப்பார்?

மல்லையா லண்டன் போயிருக்கலாம் அல்லது வேறு ஏதாவது நாட்டுக்குப் போயிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கடைசிப் புகலிடம் லண்டன்தானோ??

கடைசிப் புகலிடம் லண்டன்தானோ??

ஏற்கனவே பண மோசடியில் ஈடுபட்டு வழக்கில் சிக்கிய லலித் மோடி லண்டனில்தான் போய் தங்கியுள்ளார். இப்போது மல்லையாவும் அங்கு போய் விட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

கடைசியில்... எல்லோருக்குமே லண்டன்தான் "கடைசிப் புகலிடம்" போல!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+