சட்டசபை காங். தலைவர் பதவி... விஜயதாரணி, வசந்தகுமார் மல்லுகட்டு
டெல்லி: சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியைப் பெறுவதற்கான லாபியில் விஜயதாரணி மற்றும் வசந்தகுமார் மும்முரமாக இறங்கியுள்ளனர்.
சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் 41 இடங்களில் போட்டியிட்டது காங்கிரஸ். இதில் 8 தொகுதிகளில் மட்டும் அக்கட்சி வென்றது.

கடந்த தேர்தலில் வென்ற விஜயதாரணி மீண்டும் இத்தேர்தலில் வென்றுள்ளார். 2006-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட வென்ற ஹெச். வசந்தகுமார் இந்த தேர்தலில் வென்றுள்ளார்.
இந்த இருவரும் எப்படியாவது சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை பெறுவதில் மும்முரமாக இறங்கியுள்ளனர். சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவராக விஜயதாரணி நியமிக்கப்பட்டார். ஆனால் இந்த பதவியில் இருந்து திடீரென அவர் தூக்கியடிக்கப்பட்டார்.
இதனால் கொந்தளித்து போனார் விஜயதாரணி. பின்னர் டெல்லி சென்று ராகுலை நேரில் சந்தித்து போராடி மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலர் பதவியை வாங்கியிருந்தார். தற்போதும் இதேபோல் சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை பெற டெல்லியில் தீவிரமான லாபியில் இறங்கியுள்ளார் விஜயதாரணி.
இதேபோல் வசந்தகுமாரும் டெல்லியில் முகாமிட்டு தமக்கு நெருக்கமான காங்கிரஸ் பிரமுகர்கள் மூலமாக காய்களை நகர்த்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications