பஞ்சாயத்து தலைவர்களுக்கு ஆண்ட்ராய்டு போன் அளிக்கிறது பிகார் அரசு
பாட்னா: பிகார் மாநிலத்தில் பஞ்சாயத்து தலைவர்களுக்கு ஆண்ட்ராய்ட் போன் வாங்கிக்கொடுக்கிறது அம்மாநில அரசு. பின்தங்கிய மாநிலம் என்று அறியப்பட்ட பிகாரில் இது ஒரு தகவல் புரட்சியாக பார்க்கப்படுகிறது.

பிகாரில் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் 'முக்கியாஸ்' என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களின் நிர்வாக திறனை மேம்படுத்த ஆண்ட்ராய்டு போன்களை அளிக்க உள்ளது அம்மாநில அரசு. இதுகுறித்து பஞ்சாயத்துராஜ் அமைச்சர் பீம்சிங் இன்று கூறுகையில், "மாநிலத்திலுள்ள 8,0402 பஞ்சாயத்து தலைவர்களுக்கு ஆண்ட்ராய்டு போன்களை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, முறைகேடுகள் தடுப்பு, திட்டங்களை வேகப்படுத்துதல் போன்றவற்றுக்கு ஆண்ட்ராய்டு போன்கள் உதவும்.
கிராம பஞ்சாயத்து தலைவர்கள் அதிகபட்சமாக ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள ஆண்ட்ராய்டு போன்களை வாங்கிக்கொள்ள அரசு நிதி உதவி செய்யும்.












Click it and Unblock the Notifications