டெல்லி கோர்ட்டில் இருந்து ஆட்டோவில் ஏறி எஸ்கேப்பாகும் தயாநிதி மாறன்.. வைரலாகும் வீடியோ
டெல்லி: டெல்லி நீதிமன்ற வளாகத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பை தவிர்க்க முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆட்டோவில் ஏறி சென்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யபப்ட்டு வருகிறது.
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி கலாநிதி.
இந்த மனு மீது டெல்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணை நடைபெற்றது. நேற்றைய விசாரணைக்கு தயாநிதி உள்ளிட்ட 3 பேரும் ஆஜராகி இருந்தனர். இந்த வழக்கின் விசாரணை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
நீதிமன்ற விசாரணைகள் முடிவடைந்த பின்னர் அங்கிருந்த செய்தியாளர்கள் கூட்டத்தைப் பார்த்தார் தயாநிதி மாறன். உடனே செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்க்க நினைத்த தயாநிதி மாறன் திடீரென ஆட்டோ ஒன்றில் ஏறி சென்றார். இதையும் விடாமல் வீடியோ எடுத்து பதிவு செய்தனர் பத்திரிகையாளர்கள்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.