முதல் இரவில் நடுத்தெருவில் நின்று மக்களை பீதியடைய வைத்த புதுமணப் பெண்: வீடியோ இதோ
டெல்லி: திருமணம் முடிந்து முதல் இரவு கொண்டாட வேண்டிய நேரத்தில் புதுமணப் பெண் நடுத்தெருவில் நின்று கொண்டிருந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி பிரபலமாகியுள்ளது.
திருமணம் நடந்த அன்று முதல் இரவை கொண்டாட வேண்டிய நேரத்தில் இளம்பெண் ஒருவர் நடுத்தெருவில் கார் அருகே தனியாக நிற்கும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி பிரபலம் ஆகியுள்ளது.
அந்த வீடியோவின் விபரம் வருமாறு,
இளம்பெண் ஒருவர் புத்தாடை அணிந்து கார் அருகே நிற்கிறார். அந்த வழியாக செல்லும் ஆண்கள் அவரிடம் என்ன என்று கேட்டதற்கு கார் நின்றுவிட்டது கணவர் டீசல் வாங்கச் சென்றுள்ளார் அதனால் இங்கு நிற்கிறேன். காருக்குள் வெக்கையாக இருப்பதால் வெளியே நிற்கிறேன். எனக்கு இன்று தான் திருமணம் நடந்தது என்று கூறுகிறார்.
பின்னர் இரு வாலிபர்களை பார்த்து கார் டிக்கியில் இருக்கும் பொருட்களை எடுத்து வாகனத்திற்குள் வைக்க உதவுமாறு கூறுகிறார். அதற்கு அவர்கள் டிக்கியில் என்ன உள்ளது என்று கேட்க, பரிசுப் பொருட்கள் என்கிறார் அந்த பெண்.
அப்போது தான் கார் அருகே தரையில் யாரோ போர்த்திக் கொண்டு கிடப்பதை பார்த்த வாலிபர்கள் போர்வையை நீக்கியபோது மணமகன் இறந்து கிடக்கிறார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடிக்கிறார்கள். அடுத்ததாக வந்தவர்கள் பிணத்தை பார்த்ததும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தபோது தான் அந்த பெண் இது சும்மா விளையாட்டு என்று கூறி தரையில் மணமகன் கோலத்தில் படுத்திருந்தவரை எழுந்திருக்குமாறு கூற அவரும் எழுந்து உட்கார்ந்தார்.
போலீசாரும் வந்து அது பிணம் என நினைக்க அந்த பெண் விளக்கிக் கூறிய பிறகு அவர்களும் அங்கிருந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications