கோஹ்லிக்கும் அவரது காதலி அனுஷ்காவுக்கும் இடையே இனி ஒன்னும் இல்லையாம்!
மும்பை: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், அவரது காதலியும், நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் பிரிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் கோஹ்லி அனுஷ்காவை இந்த ஆண்டே திருமணம் செய்ய முடிவு செய்தார்.
இதையடுத்து இது குறித்து அவர் அனுஷ்காவிடம் தெரிவிக்க அவரோ எனக்கு படங்களில் கவனம் செலுத்துவது தான் முக்கியம் என்று கூறிவிட்டார்.
ட்விட்டர்
அனுஷ்கா திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த வேகத்தில் கோஹ்லி இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் அவரை ஃபாலோ செய்வதை நிறுத்தினார். ஏதோ கோபத்தில் செய்துள்ளார் என்று பிறர் நினைத்தனர்.
பிரிவு
திருமண விவகாரம் குறித்து ஏற்பட்ட பிரச்சனையால் அனுஷ்கா, கோஹ்லி இடையே பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தது. ஒருவரையொருவர் சந்திப்பதையும் தவிர்த்தனர்.
எல்லாம் முடிந்துவிட்டது
கோஹ்லி, அனுஷ்கா இடையே எல்லாம் முடிந்துவிட்டது. இருவரும் அவரவர் வேலையில் இனி கவனம் செலுத்த உள்ளனர் என்று அவர்களுக்கு நெருக்கமானவர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
திருமணம்
திருமண பிரச்சனையால் தான் கோஹ்லியும், அனுஷ்காவும் பிரிந்துவிட்டனர். கோஹ்லிக்கு இந்த ஆண்டே அனுஷ்காவை மனைவியாக்க விருப்பம். ஆனால் அனுஷ்காவுக்கோ தனது சினிமா வாழ்க்கை மீது கவனம் செலுத்துவது தான் முக்கியம். இதனால் தான் அவர்கள் பிரிந்துவிட்டனர் என்று அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.