ஓட்டுப் போடுங்க... விழிப்புணர்வு ஏற்படுத்தும் விராட் ஹோக்லி
டெல்லி: டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஓட்டப்பதிவு எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக பாலிவுட் நட்சத்திரங்களையும், கிரிக்கெட் வீரர்களையும் விளம்பர தூதர்களாக களமிறக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இளைஞர்கள் மற்றும் பெண்களிடம் ஓட்டுப்போடுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் விளம்பரங்களை தயாரித்து ஊடகங்கள் மூலம் வெளியிட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதற்காக கிரிக்கெட் வீரர் விராட் ஹோக்லி, பாலிவுட் நடிகை சோகா அலி கான் ஆகியோரை விளம்பர தூதர்களாக நியமித்துள்ளது. ஊடகங்களின் தேர்தல் பிரச்சார விதிமுறைகளை அறிவித்த தேர்தல் ஆணையம் இதனை தெரிவித்துள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்த விளம்பர தூதர்கள் பிரிண்டிங் மற்றும் எலக்ட்ரானிக் விளம்பரங்களுக்கு பயன்படுத்தப்படுவர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த விராட் ஹோக்லி, , மைதானத்தில் எனது பேட் பேசும் அதே போல் தேர்தல் தினத்தன்று மக்களின் ஓட்டு பேச வேண்டும் என்றார்.
அதேபோல் மற்றொரு விளம்பர தூதுவரான சோகா அலி, மக்களிடம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தனக்கு இத்தகையதொரு வாய்ப்பு கிடைத்திருப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். ஓட்டளிப்பதன் முக்கியத்துவம் குறித்து அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நகர்புற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது நகரத்தை மட்டுமின்றி நாட்டையும் உயர்த்தும் செயல் எனவும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications