அரை நிர்வாணத்தில் கைகள் கட்டப்பட்டு சாலையில் கிடந்த அரசு மருத்துவர்.. போலீஸார் தாக்கியதாக புகார்
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான உபகரணங்கள் இல்லை என குற்றம்சாட்டிய அரசு மருத்துவர் அரை நிர்வாண கோலத்தில் கைகள் கட்டப்பட்டு சாலையில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திராவின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது நரசிப்பட்டினம் அரசு மருத்துவமனை. இங்கு மருத்துவராக சுதாகர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் தான் பணியாற்றும் மருத்துவமனையில் கொரோனா நோய் தடுப்பிற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் இல்லை என்று அவர் மார்ச் மாதம் குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும் என் 95 மாஸ்க்களும் கொடுப்பதில்லை, ஒரே மாஸ்க்கை 15 நாட்களுக்கும் மேலாக பயன்படுத்தப்படுகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

சுகாதாரத் துறை
இதையடுத்து அவரை கடந்த மாதம் 8ஆம் தேதி ஆந்திர மாநில சுகாதாரத் துறை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து அவர் என்ன ஆனார் என தெரியவில்லை. இந்த நிலையில் அவர் நேற்று மாலை நரசிப்பட்டினம் அருகே ஒரு இடத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் அரை நிர்வாண கோலத்தில் லாரியின் முன்பு இருந்தார்.

கான்ஸ்டபிள்
அங்கு சென்ற போலீஸார் அவரை மீட்டு நரசிப்பட்டினம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பணி இடைநீக்கம் செய்யப்பட்ட மருத்துவர் சுதாகரை போலீஸ் கான்ஸ்டபிள் தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் அந்த கான்ஸ்டபிள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

போலீஸார்
இதுகுறித்து காவல் துறை ஆணையர் மீனா கூறுகையில் அக்கயாபாளையம் அருகே யாரோ ஒரு நபர் சாலையில் இடையூறு செய்வதாக காவல் துறை கட்டுப்பாட்டுக்கு தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து அங்கு போய் பார்த்தபோது அவர் டாக்டர் சுதாகர் என தெரியவந்தது. இதையடுத்து அவர் கட்டுப்படுத்த போலீஸார் முயன்றனர்.

நடவடிக்கை
அப்போது அவர் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதுடன் போலீஸ் கான்ஸ்டபிளின் செல்போனை பிடுங்கி எறிந்தார். மருத்துவருக்கு மன ரீதியிலான பிரச்சினைகள் இருப்பதாக தெரிகிறது. இதையடுத்து அவரை மீட்டு மருத்துவமனையில் பரிசோதனைக்கு அழைத்து சென்றுள்ளோம். அவர் போதையில் இருந்தாரா என்பது குறித்து பரிசோதனை நடத்தப்பட்டது. அந்த முடிவுகள் வந்தவுடன் அவர் மீது நடவடிக்கை எடுப்பதா வேண்டாமா என்பது தெரியவரும் என்றார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications